ஜெயகாந்தனின் கல்பனா கட்டுரைகள் கேள்வி பதில்கள்

ஜெயகாந்தனின் கல்பனா கட்டுரைகள் கேள்வி பதில்கள், தொகுப்பு ஜெயசிம்ஹன், எழில்முத்து. ஜே.கே. வாசகர் வட்டம் வெளியீடு, விலை 150ரூ.

ஜே.கே.வின் பார்வை கல்பனா பத்திரிகை 1979ல் ஜெயகாந்தனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த பத்திரிகை. இது சிறுகதை, குறுநாவலுக்கு முக்கியத்துவம் தந்த பத்திரிகை. இதில் அவர் எழுதிய வலுமையான கட்டுரைகள், கேள்வி பதில் பகுதிகள் ஆகியவை இடம்பெற்ற பக்கங்கள் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளன. கலைஞர் கருணாநிதியை ஜெயகாந்தன் சந்தித்து எடுத்த நேர்காணல் மிகமுக்கியமானது. அதேபோல் எம்.ஜி.ஆருக்கு அர்த்தமுள்ள கேள்விகள் என்ற பெயரில் அவர் முன்வைத்திருக்கும் கேள்விகளைப் படிக்கும்போது பெரும் மலைப்பாகத் தோன்றுகிறது. ஆர்.எஸ்.எஸ்., பெரியார், ஆப்கானிஸ்தான், சோவியத் யூனியன் பற்றிய ஆழமான ஜேகேவின் கட்டுரைகளும் உள்ளன. நன்றி: அந்திமழை, 1/1/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *