தங்கத்தின் விலை ஏறுகிறதா? ஏமாற்றுகிறதா?
தங்கத்தின் விலை ஏறுகிறதா? ஏமாற்றுகிறதா?, மாரிக்கனி, ஒருலகம் பதிப்பகம், 75, முதல் மாடி, லேக் வியூ ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 60ரூ.
தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே போகிறது. இதற்குக் காரணம் என்ன? தங்கத்தின் விலை குறைய வேண்டுமானால் அதற்கு என்ன வழி என்று விவரிக்கிறார் ஆசிரியர்.
—-
வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை ரூ160. ஔரங்கஜேப் (அவுரங்கசீப்) எத்தகைய குணம் உடையவர்? அவர் மீது வீண்பழிகள் விழக்காரணம் என்ன என்பதை அலசி ஆராய்ந்ததின் விளைவாக விளைந்த நூல். அவுரங்கஜேப்பின் மீது சுமத்தப்படுகின்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து அவர் ராஜபுத்திரர்களின் விரோதியா? சீக்கியர்களின் விரோதியா? இசைக்கலைஞர்களை இம்சித்தவரா? இந்துக்களை இம்சித்தவரா? மதவெறியரா? ஆகிய தலைப்புகளில் விளக்கம் தருகிறது இந்த நூல். இந்து-முஸ்லிம்-கிறிஸ்தவ ஒற்றுமை வளர வேண்டும் என்றும், அதனைத் தடுத்திட முயலும் தீயசக்திகள் நாச நர்த்தனங்களை நாட்டுக்குப் படம் பிடித்துக் காட்டிட வேண்டும் என்ற நோக்கில் அகண்ட பாரதத்தின் வரலாற்றை ஆய்வு செய்திருக்கிறார்வ ரலாற்று ஆய்வாளர் செ. திவான். நன்றி: தினத்தந்தி,6/11/13