நடுகற்கள்
நடுகற்கள், சரித்திரச் செம்மல் ச. கிருஷ்ணமூர்த்தி, மெய்யப்பன் பதிப்பகம்.
வரலாற்று ஆய்வுகளை தெரிந்துகொள்ளாதவரை ஒன்றுமில்லை. நூல்கள் மற்றும் ஆவணங்கள் மூலம் தெரிந்து கொண்டால் ஏற்படும் வியப்பும், ஆர்வமும் அதிகரிக்குமேயன்றி குறையாது. அதற்கு உதாரணம்தான் நடுகற்கள் புத்தகம். நடுகற்கள் நேற்றைய வரலாற்றை நினைவு சின்னமாக வழங்குகிறது. மேற்கு இந்தியாவில் நினைவு கற்களை பலியா, கம்பியா, சர என்று அழைப்பர். மத்திய இந்தியாவில் மாரியர்கள் வழிபடும் நினைவுகற்கள் உரஸ்கல் எனப்படுகிறது. வட இந்திய கொல்லா மற்றும் போயா இனத்தவர் வீர்கா என்று நடுகற்களை அழைப்பர். தமிழகத்தில் பல்லவர் காலம் துவங்கி உருவாக்கப்பட்ட நடுகற்கள், பெரும்பாலும் செவ்வக வடிவ கருங்கற்களே ஆகும். நடு கல்லை வழிபட்டால் மழை பொழியும் என்ற நம்பிக்கை, தமிழக மக்களிடையே நீண்ட காலமாக இருந்ததை வலியுறுத்தி தொழுது போகவே கொடுங் கானம் மழை பெய்தலான் குளிரும் என்பான் வண்டு மேம்படுதலாகிய காரியம் கூறினான் என்ற பாடல் மூலம் குறிப்பிடப்படுகிறது. இந்த நூலை, செங்குன்றம் முழுநேர நூலகத்தில் படித்து பயன்பெறலாம்.
—-
மதராஸ் என்கிற சென்னை சோழ மண்டலத்தின் ராணி, சி.எல்.டி. குப்தா, சுப. முத்தையா, பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 127, விலை 180ரூ.
1300 ஆண்டுகளுக்கு முன், கிரேக்க ரோம் நாட்டினர், இந்தியாவின் தென்பகுதி சோழ மண்டலக் கடற்கரையில் வந்து இறங்கினர். 400 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் நாலாவது பெரிய நகரமாக தெற்கு வாயிலாக மதராஸ் உருவானது என்று துவங்கி, நம் சென்னை வரலாற்றின் மலரும் நினைவுகள், இந்த நூலில் மணம் வீசுகிறது. புத்தகச் சாப்பாட்டில் பக்கத்தில் உள்ள கூட்டுப் பொறியல்போல படங்கள், இந்த நூலில் கொஞ்சம் சோறு, மிஞ்சும் அளவில் பக்கத்தில் பதார்த்தங்கள் வெகு ஜோராகப் பரிமாறப்பட்டுள்ளன. போர்த்துக்கீசியர், 400 ஆண்டுகளுக்கு முன், மெலியாபூர் (மயிலாப்பூர்) துறைமுகம் காண வந்தனர். விக்டோரியாவின் பிரிட்டன் ஆங்கிலேயரும், ஸ்காட்லாந்துக்காரரும், அவர் குடும்பத்தாரும் வணிகம் செய்ய வந்து காலூன்றினர். 200 ஆண்டுகளுக்கு முன், மதராஸ் மொத்த வியாபாரத்தலமாக ஆனது. இரண்டாம் உலகப் போருக்கு பின் மதராஸ் பரபரபப்ன மக்கள் தொகை மிக்க தொழில் நகரானது. தற்கால அரசியல் வரை விளங்கும் இந்நூலில் சில தகவல்கள்-1640ல் பண்டக சாலையாக ஜார்ஜ் கோட்டை எழுந்தது. 1857ல் சென்னைப் பல்கலைக் கட்டடம் உருவானது. பிரசிடென்சி கல்லூரி, இதில் நோபல் பரிசு பெற்ற மாமனும், மருமகனுமான சர்.சி.வி. ராமனும், எஸ். சந்திரசேகரும், ராஜாஜியும் படித்து உயர்ந்தனர். பல்லவர் காலத்தில், அடையாறு சிறந்த துறைமுகமாக இருந்தது. இதுபோல் பல அற்புத தகவல்கள் பல உள்ளன. -முனைவர் மா.கி. ரமணன். நன்றி: தினமலர், 4/8/2013.