நான் கண்ட அருட்செல்வர்

நான் கண்ட அருட்செல்வர், முனைவர் ஜி.ஜான் சாமுவேல், ஹோம்லாண்ட் பதிப்பகம், பக். 121, விலை 100ரூ.

அருட்செல்வர் என்று அனைவராலும் அழைக்கப்படும் மறைந்த பெகாள்ளாச்சி நா. மகாலிங்கத்தின் நினைவை போற்றம் வகையில், தன்னுடன் அவர் கொண்டிருந்த நட்பையும், பொது தொடர்பையும் வெளிப்படுத்தி உள்ளார் நூலாசிரியர். ஆசியிவியல் நிறுவனத்தில் நடந்த, முதல் அனைத்துலக முருகன் மாநாட்டிற்கு, அருட்செல்வர் வழங்கிய ஒத்துழைப்பு முதற்கொண்டு, அந்த நிறுவனத்தின் வளர்ச்சியில், அவர் கொண்டிருந்த ஈடுபாடு ஒவ்வொன்றும் விளக்கப்பெற்றுள்ளன. அருட்செல்வர் பற்றிய செய்திகளுடன், தமிழ் ஆய்வுச் சிந்தனைகளும், அரிய தமிழ்த் தரவுகளும் இடம்பெற்றிருப்பது, படிபோரின் ஆர்வத்தைத் தூண்டும். ஆசியவியல் நிறுவனத்துடன் அருட்செல்வர் தொடர்பு கொண்ட வண்ண நிழற்படங்கள், புத்தகத்தின் மதிப்பைக் கூட்டுகின்றன. ஐந்து கண்டங்களைச் சேர்ந்த இருப்பத்தாறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் கலந்துகொண்ட இம்மாபெரும் அனைத்துலக மாநாட்டில், அருட்செல்வர் வரவேற்புரை ஆற்றினார். நான்கு நாட்களுமே அருட்செல்வர் எங்களோடு இருந்து, மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து தொடர்ந்து கலந்துரையாடினார்(பக். 46). -முகிலை ராசபாண்டியன். நன்றி: தினமலர், 7/2/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *