நெருப்பில் பூத்த ஆசிரியர்

நெருப்பில் பூத்த ஆசிரியர், இதயம் பதிப்பகம், மதுரை, விலை 250ரூ.

ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியராக வாழ்க்கையை ஆரம்பித்த இந்நூலாசிரியர் கலைமாமணி எப்.சூசைமாணிக்கத்தின் வாழ்க்கை வரலாறு, ஒரு நாவலைப்போல் அமைந்துள்ள வியப்பளிக்கிறது. அவர் ஆசைப்பட்டு அமைத்த வாழ்க்கையுமல்ல. திறமைகளால் அமைந்த வாழ்க்கையும் அல்ல. தானே அமைந்த ஆசிரியர் வாழ்வை விருப்பமுடன் ஏற்றுக்கொண்டு வாந்தார். ஆனால் எதிர்கொண்ட அனுபவங்கள் வித்தியாசமானவை, விறுவிறுப்பானவை, திருப்பங்கள் நிறைந்தவை, திடுக்கிட வைப்பவை, சூழ்ச்சிகள் சூழ்ந்தவை, சுவையானவை. இந்த அனுபவங்களே அவரை தனித்துவம் பெற்ற வரலாற்று நாயகராக்கி இவ்வரலாற்றின் மையப்புள்ளியாய் திகழ்கிறார். உண்மைச் சம்பவங்கள் உயிரோட்டமாய் அமையப் பெற்றுள்ளதால் படிப்பதற்கு விறுவிறுப்பாயிருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 2/7/2014.  

—-

கிளையில் அமர்ந்த குயில் கீதம் பாடுது, கவிஞர் டி.ஆர். கருப்பசாமி, தேவராயநேரி, திருச்சி, விலை 30ரூ.

வயல் வெளிகளில் பயிர்களின் அசைவால் இருதயத்தில் எழுந்த கவிதைகளின் தொகுப்பு தமிழ் விருந்தாக அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 2/7/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *