புரட்சித்தலைவர் கண்ட புரட்சித்தலைவி

புரட்சித்தலைவர் கண்ட புரட்சித்தலைவி, கலைமாமணி வி. ராமமூர்த்தி, வி.ஆர். பதிப்பகம், சென்னை, விலை 150ரூ.

சினிமா உலகில் 40 ஆண்டு காலம் அனுபவம் உள்ள பத்திரிகையாளர் கலைமாமணி வி.ராமமூர்த்தி, எம்.ஜி.ஆருடனும், ஜெயலலிதாவுடனும் நெருங்கிப் பழகியவர். தனது 40 ஆண்டு அனுபவங்களை இப்புத்தகத்தில் சவைபட எழுதியிருக்கிறார். மைசூரில், பி.ஆர். பந்துலுவின் கங்காகவுரி படப்பிடிப்பு நடந்தபோது, அரிவாள் கத்தியுடன் வந்து கன்னடர்கள் கலாட்டா செய்தனர். ஜெயலலிதா அஞ்சா நெஞ்சத்துடன் எதிர்த்து நின்று, அவர்களை விரட்டி அடித்த அந்த சம்பவத்தைப் படிக்கிறபோது, சின்ன வயதிலேயே ஜெயலலிதாவிடம் வீரலட்சுமி குடிகொண்டிருந்ததை அறியமுடிகிறது. இப்படி பல சம்பவங்களை சுவாரசியமாக விவரிக்கிறார், ராமமூர்த்தி. ஏராளமான படங்கள் விழிகளுக்கு விருந்தளிக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 14/10/2015.  

—-

வட தமிழ்நாடு, வடதமிழ்நாடு மக்கள் இயக்கம் வெளியீடு, சென்னை, விலை 40ரூ.

ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, புதிதாக தெலுங்கானா மாநிலம் அமைக்கப்பட்டபோது, தமிழ்நாட்டை வடதமிழ்நாடு, தென்தமிழ்நாடு என்று இரண்டு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்கிறார் நூலாசிரியர் ந. இறைவன். நன்றி: தினத்தந்தி, 14/10/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *