மணக்கும் வளம்
மணக்கும் வளம், இனிக்கும் மனம், தாமரை பப்ளிகேஷன்ஸ், விலை 80ரூ.
நூலாசிரியர் கொ.மா. கோதண்டம் அடர்ந்த காடுகளிலும், மலைகளிலும், மலைவாசி மக்களுடன் சென்று, இரவில் பந்தம் கொளுத்தி வைத்து ஆற்றங்கரையில் தங்கி காடுகளின் அழகிய ரம்மியமான காட்சியை தத்ரூபமாக எழுதி நூலாக வடித்துள்ளார். இதனை படிக்கும் போது நமக்கு காடுகளுக்கு நேரில் செல்வதுபோல உணர்வு ஏற்படுகிறது. நன்றி: தினத்தந்தி, 5/11/2014.
—-
மரண விளிம்பில் மனிதன், எஸ்.கே.எஸ்.பப்ளிஷர்ஸ், விலை 60ரூ.
குர்ஆனில் கூறப்படும் கருத்துக்களுக்கு ஏற்ப, உண்மைக் கதைகளை எழுதியுள்ளார் எஸ். அக்பர் பாதுஷா. கதைகள் படிப்பதற்கு சுவையாகவும், படிப்பினை நிறைந்ததாகவும் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 5/11/2014.