செம்பியன்மாதேவி கலைக்கோவில்கள்
செம்பியன்மாதேவி கலைக்கோவில்கள், முனைவர் கோ. எழில்ஆதிரை, இயல்வெளியீடு, விலை 400ரூ.
தமிழகத்து வரலாற்றில் ஈடு இணையற்ற கலைத்தொண்டு ஆற்றிய பெண்மணி செம்பியன்மாதேவியாவார். இவர் கண்டாதித்த சோழனின் மனைவியும், உத்தமசோழனின் தாயுமாவார். இவர் தன் வாழ்நாள் முழுவதும் காளத்தி மலை முதல் நாகப்பட்டினம் வரை புகழ்வாய்ந்த பாடல் பெற்ற தலங்களைப் புதியதாகக் கட்டி அவற்றில் எழிலார்ந்த செய்யுத் திருவுருவங்களை வீதி உலாவிற்காக செய்தமைத்து ஏராளமான கொடைகளை அளித்து தனக்கென ஒரு மாபெரும் வரலாற்றையே தோற்றவித்த பெண்மணியாவார். அவர் கோனேரிராசபுரத்தில் செய்த பணிகளை விரிவாகவும், விளக்கமாகவும் கூறுகிறது இந்த நூல்.
நன்றி: தினத்தந்தி, 14/9/2016