அன்புள்ள மாணவனே
அன்புள்ள மாணவனே, வெ. இறையன்பு, விஜயா பதிப்பகம், விலை 135ரூ.
தனி மனிதரிடையே ஒளிந்திருக்கும் முழுத்திறன்களை வளர்த்தெடுப்பதும், அதைச் சமுதாயத்தின் நலனுக்கும் பயன்பெற வைப்பதுமே கல்வியின் இலக்குகளாகும். அந்த வகையில் கல்வியின் உன்னதம் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளரும், பேச்சாளருமான வெ. இறையன்பு மாணவர்களோடு அறிவார்ந்த அற்புதமான உரையாடலை நிகழ்த்தி இருக்கிறார். அவர் மாணவர்களுக்கு எழுதிய 30 மடல்களின் தொகுப்பே இந்நூல்.
‘குழந்தைகளை வளர்ப்பது பெரிது அன்று. அவர்களது அறிவை வளர்ப்பதே அதை விடப் பெரிது ‘நீ மகத்தான ஆற்றலாக உருவாவதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறாய். அற்ப சிந்தனைகளில் உன் அரிய நேரம் வீணாகி விடக்கூடாது. ‘நீ சாதிக்கப் பிறந்தாய் என்பதைக் கருத்தில் கொண்டு நேரத்தைப் பயன்படுத்து, அவசியம் சரித்திரம் படைப்பாய் என்பன போன்ற கருத்துகளை நூல் முழுக்கக் காணலாம்.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/1000000026633.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
நன்றி: தினத்தந்தி, 21/3/2018.