இறையன்பு கருவூலம்
இறையன்பு கருவூலம், இரா.ரவி, வானதி பதிப்பகம், விலை 110ரூ.
மூன்று முனைவர் பட்டங்களைப் பெற்று, தமிழக அரசின் முதன்மை செயலாளராக, முது முனைவராக, நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்த வெ.இறையன்பு எழுதிய 16 நூல்களைத் தேர்ந்தெடுத்து, அந்த நூல்களைப் பற்றிய மதிப்பீடுகளைத் தந்து இருக்கும் இந்த நூல், இறையன்புவின் ஆற்றல்களை தெளிவாக அறிந்து கொள்ள ஒரு வழிகாட்டி போல அமைந்து இருக்கிறது.
‘தந்தி’ பதிப்பகம் வெளியிட்ட ‘உலகை உலுக்கிய வாசகங்கள்’, ‘கேள்வியும் நானே, பதிலும் நானே’ ஆகியவை உள்பட இறையன்பு எழுதிய புத்தகங்களில் காணப்படும் அவரது விழுமிய சிந்தனைகள், உண்மை ஒளிதரும் அனுபவமொழிகள் ஆகியவை இந்த நூலில் செழுமையாக தொகுத்துத் தரப்பட்டுள்ளன. அத்துடன் சில நிகழ்வுகளில் இறையன்பு ஆற்றிய உரைகள், வேறு சில புத்தகங்களுக்கு அவர் வழங்கிய அருமையான அணிந்துரைகள் ஆகியவைகளும் இதில் இடம்பெற்று இருக்கின்றன.
இறையன்புவின் எழுத்தாற்றல், தெளிவான சிந்தனைகள், அவரது ஆளுமைத் திறன் ஆகிய அனைத்தையும் இந்த நூலில் ஒரு சேரக் காணமுடிகிறது.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818