கடைசித் தீக்குச்சி
கடைசித் தீக்குச்சி, ராஜேஷ்குமார், அருணோதயம், விலை 150ரூ.
கிரைம் கதை மன்னர் ராஜேஷ்குமார் தனது கைவண்ணத்தில் அடுக்கடுக்காக கோர்த்துவிடும் மர்ம முடிச்சுகளை வாசர்களை விட்டே அவிழ்க்க ஆர்வப்படுத்தும் மற்றொரு திகில் நாவல் ‘கடைசி தீக்குச்சி’.
இது தினத்தந்தியில் தொடர்கதையாக வெளியானபோதே வாசகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது. சித்தார்த் என்பவர் தலைமையில் குரங்குகளை கொண்டு பயோஜெனிக் எனும் ப்ராஜெக்டை இளம் ஆராய்ச்சியாளர்கள் சபரியும், பிரதாப்பும் மேற்கொள்கிறார்கள். இதற்கிடையே சபரியின் மனைவியான அஜந்தாவின் தோழி வாசுகி அவன் வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறாள்.
போலீசுக்கு தெரிவ்ககாமல் வாசுகியின் உடலை சபரி டிஸ்போஸ் செய்ய, அவனுக்கு அடுத்தடுத்து நெருக்கடிகள் ஏற்படுகின்றன. சித்தார்த், பிரதாப் ஆகியோரும் மர்மமான முறையில் இறக்கிறார்கள். அதிலும் ப்ராஜெக்டை பின்னணியாக கொண்டு வாசுகியின் கொலைக்கு யூகிக்கமுடியாத அதிர்ச்சி திருப்பங்களை ஏற்படுத்தி நாவலோடு ஒன்றவைத்துவிடுகிறார், ராஜேஷ்குமார்.
நன்றி: தினத்தந்தி, 13/9/2017.