கள்ளிவட்டம்

கள்ளிவட்டம், பா.சரவணகுமரன், போதிவனம், விலை 100ரூ.

கீழத்தஞ்சை:மண்ணும் மனங்களும்

நாகை திருக்கண்ணங்குடியைச் சேர்ந்த பா.சரவணகுமரனின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. திருமணம் தள்ளிப்போகும் இளைஞனின் ஏக்கங்கள், அவன் மண் சார்ந்த நினைவுகள் என இரண்டு தளங்களில் எழுதப்பட்ட இயல்புவாதச் சிறுகதைகள்.

மகள் பருவம் எய்தியதும் கள்ளுக்கடையை மூடிவிட்டு தார்ச்சாலை போடும் வேலைக்குப் போகும் பரமேஸ்வரி, மகளின் திருமணத்துக்காக விற்ற ‘மாரியம்மா’ செல்லும் வழியில் இறந்துவிட மாடு வாங்கியவருக்குப் பணத்தைத் திருப்பிக்கொடுக்கும் சின்னச்சாமி என உழைப்புக்கும் பெருந்தன்மைக்கும் உதாரணங்களாக விளங்கும் காவிரிப் படுகையின் கதாபாத்திரங்கள், கதைகள் நெடுகிலும் கலந்திருக்கிறார்கள்.

பொங்கலுக்காக திருக்கண்ணங்குடிக்குப் போய் சென்னை திரும்பும் சத்தியநாதனின் நினைவுகளில் எல்லாம் கபடி, மஞ்சத்தண்ணி, கள்ளிவட்டம், ராஜேஸ்வரி என கிராமமே நிறைந்திருக்கிறது. எல்லாக் கதைகளிலும் அதே சத்தியநாதன்தான் வெவ்வேறு பெயர்களில் உலாவருகிறான். கூடவே, காவிரிப்படுகையின் நிலவொளியும், மனிதர்களும், அவர்களின் மனங்களும்.

நன்றி: தி இந்து,24/11/18.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *