கந்தன் கதை

கந்தன் கதை, ரவிக்குமார், அவனருளாலே பதிப்பகம், விலைரூ.450.

தமிழ்க் கடவுள் கந்தனை புவி மாந்தரோடு தொடர்புபடுத்தி கற்பனை கலந்து எழுதிய தொகுப்பு நுால். கற்பனை கதையமைப்பும், காட்சிகளும் சேர்க்கப்பட்ட நெடிய புதினம். கந்த புராணத்தை அடிப்படையாகக் கொண்டு, பக்தித் திரைப்படங்களில் காட்டப்பட்ட வானவர் காட்சியமைப்புகளும், கதைகளும் வரவேற்பு பெற்றன. இந்த பின்னணியில் புதிய புனைவுகளோடு விவரிக்கப்பட்டுள்ளது. சிவன், பார்வதி, ரதி, மாரன், இந்திரன், குமரன், சூரபத்மன், அகத்தியர், திலோத்தமை என கதாபாத்திரங்களின் உரையாடல்களோடு பயணிக்கிறது கதை. தற்கால மொழி நடையில் அமைந்துள்ளது.

பழனி போகநாதர் சம்பவங்கள், வள்ளி-கந்தன் இணைப்பு மாறுபட்ட கதைகளாக அமைக்கப்பட்டுள்ளன. திருச்செந்துார் போர் ஆயத்தங்களை காட்சிகளாக்கி எழுச்சியோடு சித்தரிக்கப்பட்டுள்ளன.

திருப்பரங்குன்றத்தில் தேவயானையுடனான திருமணமும், திருத்தணியில் நிகழும் வள்ளி திருமணமும் சுவைபட புனையப்பட்டுள்ளன. புதினத்தின் காட்சிகள் அறுபடை வீடுகளையும் சுற்றி வருகின்றன. புராண கதைகளின் அடிப்படை தத்துவத்தைக் கூறி, கந்தன் கதை உருவான விதமும் நுாலின் இறுதியில் விளக்கப்பட்டுள்ளது. மிகையான கற்பனையையும் காண முடிகிறது.

– மெய்ஞானி பிரபாகரபாபு

நன்றி: தினமலர், 11.7.21

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *