கவிமணி வரலாற்றாய்வாளர்
கவிமணி வரலாற்றாய்வாளர், அ.கா.பெருமாள். நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், விலை 85ரூ.
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையை அரும்பெரும் கவிஞராகவே அறிந்திட்ட நமக்கு இந்த புத்தகம் அதே எண்ணத்தை முற்றிலுமாக மாற்றுவதாக அமைந்துள்ளது. கவிமணி கல்வெட்டு ஆய்வாளராகவும், வரலாற்று ஆய்வாளராகவும் திகழ்ந்தவர் என்பது ஆச்சரியமளிக்கும் செய்தி. அவருடைய திறமையின் இன்னொரு புறம் இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டு உள்ளது என்றே கூறவேண்டும்.
கவிமணி பற்றி இதற்கு முன்னர் இதுபோன்ற ஆய்வு நூல் வந்திருக்குமா? என்பதும் கேள்விக்குரிய ஒன்றுதான். கேரளாவில் நிலவி வந்த தந்தையிட்ன சொத்து அவருடைய சகோதரி மகனுக்கு உரிமை உடையது என்னும் மருமக்கள் வழி முறையை தடை செய்ய நூற்றாண்டுகளுக்கு முன்பாக கவிமணி மருமக்கள் வழி மான்மியம் என்ற தொடர் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியதும், அதன்பிறகே இந்த முறையை தடுக்க சட்டம் இயற்றப்பட்டதும் வியப்பு தரும் அரிய தகவல்.
கவிமணி எழுதிய கவிதைத் தொகுப்புகள் அனைத்தையும் எளிய நடையில் சுவைபட விவரித்து இருக்கிறார் நூலாசிரியர்.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027179.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818