கவிதை ஒளி
கவிதை ஒளி, பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், பக். 198, விலை 130ரூ.
உரைநடை இலக்கியத்தில் தனிமுத்திரை பதித்துள்ள பேராசிரியர் இரா.மோகனின் 22 கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. தொன்மை இலக்கியத்திலும், புதுமைஇலக்கியத்திலும் நிறைய ஆய்வுக் கட்டுடிரைகள் எழுதியுள்ள இவர், இந்நூலில் மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், ஹைக்கூ, சங்க இலக்கியம் பற்றிய கட்டுரைகள் தந்துள்ளார்.
‘கவி ஆளுமைகள், கவிதைக் கீற்றுகள்’ என்ற தலைப்பிலான அத்தியாயங்களில், 13 கவிஞர்களின் சொல் ஆளுமையை, நேர்த்தியான ஒப்பீடுகளுடன் விளக்கி உள்ளார். ‘கேட்டிசின் வாழி தோழி’ என்ற குறுந்தொகை பாடலோடு, கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன்… கணவர் என்றார் தோழி’ என்ற கண்ணதாசன் பாடல் வரிகளை ஒப்பிட்டது போன்று, ஆசிரியரின் ஆழ்ந்த இலக்கிய அறிவு, நூல் எங்கும் இழையோடுகிறது. தமிழ் இலக்கிய உலகிற்கு மகுடம் சூட்டும் கட்டுரைகள் அடங்கிய நூல்.
-ஜீ.வி.ஆர்.
நன்றி: தினமலர், 27/8/2017.