கவிதை ஒளி

  கவிதை ஒளி, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், விலை 130ரூ. பேராசிரியர், பேச்சாளர், திறனாய்வாளர் என்று பன்முகம் கொண்டவர் இரா.மோகன். அவர் எழுதிய 22 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இதில் கவி ஆளுமைகள் என்ற தலைப்பில் வ.சு.ப.மாணிக்கனார், ஈரோடு தமிழன்பன் போன்றோரின் ஆளுமைகள் குறித்தும் கவிதைக் கீற்றுகள் என்ற தலைப்பில் மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ பற்றியும் சுவைபட எழுதியுள்ளார். சங்கச் சித்திரங்கள் என்ற தலைப்பில் சங்க கால இலக்கியத்தின் சிறப்பை விவரிக்கிறார். இலக்கிய அன்பர்களுக்கு இனிய விருந்து. நன்றி: தினத்தந்தி, 4/10/2017.

Read more

கவிதை ஒளி

கவிதை ஒளி, பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், பக். 198, விலை 130ரூ. உரைநடை இலக்கியத்தில் தனிமுத்திரை பதித்துள்ள பேராசிரியர் இரா.மோகனின் 22 கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. தொன்மை இலக்கியத்திலும், புதுமைஇலக்கியத்திலும் நிறைய ஆய்வுக் கட்டுடிரைகள் எழுதியுள்ள இவர், இந்நூலில் மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், ஹைக்கூ, சங்க இலக்கியம் பற்றிய கட்டுரைகள் தந்துள்ளார். ‘கவி ஆளுமைகள், கவிதைக் கீற்றுகள்’ என்ற தலைப்பிலான அத்தியாயங்களில், 13 கவிஞர்களின் சொல் ஆளுமையை, நேர்த்தியான ஒப்பீடுகளுடன் விளக்கி உள்ளார். ‘கேட்டிசின் வாழி தோழி’ என்ற குறுந்தொகை […]

Read more