கிருதயுகம்
கிருதயுகம், பேராசிரியர் ந. வேலுசாமி, விலை 250ரூ.
சேலம், நாமக்கல் பகுதியில் வாழும் ஒரு சமூகத்தினரின் கலாச்சாரம், பொருளாதாரம், பழக்க வழக்கங்கள் இவற்றை அடிப்படையாக வைத்து இந்த நாவலை எழுதியுள்ளார், பேராசிரியர் ந. வேலுசாமி. வட்டார வழக்கில் எழுதுவது கடினம். அதை வெகு இயல்பாக எழுதியுள்ளார். ஆசரியருக்கு இது முதல் நாவல் என்பதை நம்ம முடியவில்லை. நிறைய நாவல்கள் எழுதி பக்குவப்பட்டவரின் படைப்பு என்று சொல்லத்தக்க வகையில் நாவல் அமைந்துள்ளது.
நன்றி: தினத்தந்தி, 6/4/2016.
—-
ஸ்ரீகந்தபுராணம், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 45ரூ. (ஒவ்வொரு புத்தகமும்)
முருகன் பிறப்பு முதல், தெய்வானையை மணம் செய்தது வரை கந்தபுராணத்தை அழகிய நடையில் எழுதியுள்ளார் தமிழ் கூத்தன். இவர் எழுதிய ‘‘விஷ்ணு புராண”மும் நூலாக வெளிவந்துள்ளது.
நன்றி: தினத்தந்தி, 6/4/2016.