நதிபோல ஓடிக்கொண்டிரு

நதிபோல ஓடிக்கொண்டிரு, இரா.காயத்ரி, தினத்தந்தி பதிப்பகம், விலை 100ரூ.

தன்னிடம் உள்ள அளப்பரிய ஆற்றலை உணர முடியாமல், சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள், மேற்கத்திய கலாச்சாரங்களின் தாக்கங்கள் இன்றைய இளைஞர்களைத் திசை திருப்புகின்றன. அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு இந்த நூலை பேராசிரியர் முனைவர் இரா. காயத்ரி படைத்துள்ளார்.

“சுமைகளைக் கண்டு நீ துவண்டு விடாதே
இந்த உலகத்தைச் சுமக்கும் பூமியே
உன் காலடியில்தான்”
“நீ விழுந்தபோதெல்லாம்
தாங்கிப் பிடித்த கை
நீ மனம் உடையும் போதெல்லாம்
தட்டிக் கொடுக்கும் கை
தனியே நீ அழும்போதெல்லாம்
உன் கண்ணீரைத் துடைக்கும் கை
அது வேறு யாருடைய கையும் அல்ல
உன்னுள்ளே உள்ள உன் தன்னம்பிக்கை.

என்பன போன்ற வரிகள், மாணவர்களை ஊக்கப்படுத்தும் அருமருந்து.

“தடைகளை உடைப்போம், புதிய சரித்திரம் படைப்போம்”

என இளைஞர்களுக்கு உற்சாகம் ஊட்டும் நூல்.

நன்றி: தினத்தந்தி, 5/2/19.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *