நினைவில் வாழும் குழந்தை கவிஞர்
நினைவில் வாழும் குழந்தை கவிஞர், தேவி.நாச்சியப்பன், குழந்தைப் புத்தக நிலையம், விலைரூ.180.
குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா நினைவு நுாற்றாண்டு துவக்க விழாவையொட்டி வெளியிடப்பட்டு உள்ள நுால். கவிஞரின் மகளே தொகுத்து உள்ளார். மறுபதிப்பாக வந்துள்ளது. இந்த தொகுப்பு நுால் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
முதல் பகுதியில் சில கவிதைகள் இடம் பெற்றுள்ளன. தொடர்ந்து கருத்துரை மற்றும் வாழ்த்துரைகள் இடம் பெற்றுள்ளன. இரண்டாம் பகுதியில் அழ.வள்ளியப்பா கலந்து கொண்ட நிகழ்வுகளின் போட்டோக்கள் இடம் பெற்றுள்ளன.
மூன்றாம் பகுதியில் 81 கட்டுரைகள் இடம் பெற்றுஉள்ளன. அனைத்தும் கவிஞரின் வாழ்வையும், இயல்பையும் சித்தரிப்பவை. நான்காவது பகுதியில் புதிய கட்டுரைகள் சில இடம் பெற்றுள்ளன. குழந்தை கவிஞர் புகழ் நினைவை தரும் நுால்.
– பாவெல்.
நன்றி: தினமலர், 26/12/221.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000003228_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818