பாமரருக்கும் பரிமேலழகர்
பாமரருக்கும் பரிமேலழகர், சிற்பி பாலசுப்பிரமணியம், சந்தியா பதிப்பகம், விலை 850ரூ.

இன்று வரை, வள்ளுவர் வான் குறளுக்கு உரை வகுத்த பெருமக்களில் முதன்மை இடம் பரிமேலழகருக்கே உரியது.
துல்லியத் தெளிவு, ஆற்றொழுக்கான தமிழ் நடை என மாண்புகளால் ஓங்கி ஒரு கொடி மரம் போல் உயர்ந்து நிற்பது பரிமேலழகர் உரை.
மற்றைய உரையாசிரியர்களிடம் காண முடியாத சில சிறப்புகள் பரிமேலழகரிடம் உண்டு.
மூல நுாலை வேர் நுனி முதல், உச்சித் துளிர் முனை வரை ஒரு முழுமையாகப் பார்க்கும் விரிந்த பார்வை இவருடையது.
இப்போது, ‘பாமரருக்கும் பரிமேலழகர்’ என்ற எளிய உரை, அதைத் திட்பமாக படம் பிடிக்கிறது. இயல்பாக மீண்டும் ஒரு பரிமேலழகர் நேரில் நம் காலத்துக்கு வந்து உரையாடுவது போல் இருப்பது சிறப்பு.
நன்றி: தினமலர், 3/2/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/1000000027843.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818