சிகரத்தை நோக்கி

சிகரத்தை நோக்கி, குவைத் கா. சேது, மணிமேகலைப்பிரசுரம், விலை 240ரூ.

தமிழகத்தில், செம்பொன்மாரி என்ற சிறுகிராமத்தில் பிறந்து, மும்பையில் வேலை பார்த்து, பின்னர் குவைத் நாட்டுக்குச் சென்ற கா.சேது, அங்கு விமானப் பணியாளராக சுமார் 40 ஆண்டுகள் பணியாற்றினார்.

குவைத் தமிழ்ச் சங்கத்தின் மூலம், மூத்த தலைமுறைக்கும், இளைய தலைமுறைக்கும் இணைப்புப் பாலமாக விளங்கினார். சிறந்த எழுத்தாளரான இவர், தன் வாழ்க்கை வரலாற்றை “சிகரத்தை நோக்கி” என்ற தலைப்பில் எழுதினார். அதன் இரண்டாம் பாகம் இப்போது வெளிவந்துள்ளது.

தன் வாழக்கை அனுபவங்களை கதைபோல சுவைபட எழுதியிருக்கிறார். வாழ்க்கை பிரச்சினைகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள மனவலிமை தரக்கூடிய புத்தகம்.

நன்றி: தினத்தந்தி, 15/2/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *