இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்

இலக்கியத்துக்கு ஓர் இயக்கம், க.நா.சுப்ரமண்யம், முல்லை பதிப்பகம், விலைரூ.150 இலக்கியம் பற்றிய சிந்தனைகள் கொண்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். பல கட்டுரைகள் விவாதத்துக்கு ஏற்றவை. தமிழர்களின் சிந்தனை வளம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன. இலக்கிய வட்டம் இதழில், 60 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரைகள் தொகுத்து நுாலாக்கப்பட்டுள்ளன. தமிழர் மூளையில் தர்க்கப்பூர்வ சிந்தனையை துாண்டும் வகையில் தொகுத்து நுாலாக்கப்பட்டுள்ளது.மரபு வழியில் தேங்கிவிட்ட ஒரு சமூகத்தின் மீது ஆழ்ந்த அக்கறை மற்றும் கவலை தொனிக்க எழுதப்பட்டுள்ளது. இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் என்பதில் துவங்கி, ஷேக்ஸ்பியரும் கம்பனும் […]

Read more

இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்

இலக்கியத்துக்கு ஓர் இயக்கம், க.நா.சுப்ரமண்யம், தேநீர் பதிப்பகம், பக்.176, விலை ரூ.180. தமிழின் முக்கிய இலக்கிய விமர்சகரான க.நா.சுப்ரமண்யம் தான் நடத்திய “இலக்கிய வட்டம்’ இதழில் 1963 – 65 காலகட்டத்தில் எழுதிய 25 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இலக்கியத்தைப் படைப்பது, வாசிப்பது, விமர்சிப்பது என்ற அடிப்படையில் விரியும் க.நா.சு.வின் இலக்கியப் பார்வையை விளக்குவதாக இக்கட்டுரைகள் அமைந்துள்ளன. இலக்கியப் படைப்பு என்பது தனிமனித சிருஷ்டி. படைப்பாளியின் உள்ளத்தில் திரண்டு எழுகிற ஓர் உணர்ச்சியின் உந்துதலில் ஏற்படுவது என்பது நூலாசிரியரின் கருத்து. வாசிப்பவனின் ரசனை, வாசிப்பனுபவம் […]

Read more

இலக்கியச் சாதனையாளர்கள்

இலக்கியச் சாதனையாளர்கள், க.நா.சுப்ரமண்யம், சந்தியா பதிப்பகம், விலை: ரூ.175 க.நா.சு. வரைந்த உயிர்க்கோடுகள். நகுலன், ‘அதிகமாகப் பேசாமல் நிதானமாகப் பதற்றமின்றி ஒருவருடன் இருப்பது ஒரு தத்துவம்’ என்று ‘ஐந்து’ கவிதைத் தொகுதியில் எழுதியிருப்பார். இன்னொருவருடன் அல்ல, தன்னுடனேயே ஒருவர் பேசாமல் இருக்க முடியக் கூடிய சூழல் தொலைந்துவிட்ட இந்த நாட்களில், க.நா.சுப்ரமண்யம் எழுதியிருக்கும் இந்த நூலில் 41 எழுத்தாளுமைகளைப் பற்றிய சிறு கட்டுரைகளின் முக்கியத்துவம் புலப்படுகிறது. க.நா.சு.வால் அப்படி இருக்க முடிந்ததோடு அவர்களைத் துல்லியமாக மதிப்பிடவும் முடிந்திருக்கிறது. தமிழில் கடந்த நூற்றாண்டில் நுண்கலை, இலக்கியத் […]

Read more