வீழியும் காழியும்

வீழியும் காழியும், சண்முக. செல்வகணபதி, செ. கற்பகம், தஞ்சை பெரியகோயில் வார வழிபாட்டு மன்றம், தஞ்சாவூர், பக். 96, விலை 100ரூ. திருஞானசம்பந்தர் அவதரித்த, அவருக்கு அம்மையப்பராகத் தோணியப்பர் காட்சி அளித்த சீகாழி என்கிற சீர்காழியும், திருமால் நாள்தோறும் ஆயிராம் தாமரை மலர்களால் சிவபெருமானை அர்ச்சித்து சக்கராயுதம்பெற்ற திருவீழிமிழலையும் தேவாரப் பாடல் பெற்ற சிறப்புக்குரிய தலங்களாகும். காழிபாதி வீழிபாதி என்னும் வழக்காறு பெற்ற திருத்தலம் திருவீழிமிழலை. திருஞானசம்பந்தரும் அப்பரடிகளும் படிக்காசு பெற்று, மக்களின் பஞ்சத்தைப் போக்கிய பஞ்சம் துர்த்த தலமாகவும், ஞானசம்பந்தருக்கு சீர்காழி தோணியப்பர் […]

Read more

இந்தியப் பண்பாட்டுத் தூதுவர்கள் தமிழ் நாட்டிய ஆசிரியர்கள்

இந்தியப் பண்பாட்டுத் தூதுவர்கள் தமிழ் நாட்டிய ஆசிரியர்கள், சண்முக செல்வகணபதி, அய்யா நிலையம், பக். 224, விலை 225ரூ. தமிழ்ப் பண்பாடு சமயம் சார்ந்தே இருந்து வந்திருக்கிறது. நடனம் என்பது சமயஞ்சார்ந்த பண்பாட்டுக் கூறு. தமிழ்நாட்டில் நடனம் முதலில் கூத்து என்றும், பின்னர் சதிர் என்றும் அழைக்கப்பட்டு, தற்போது பரதநாட்டியம் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பரதநாட்டியத்தை வழிவழியாகப் பயின்றும் பயிற்றுவித்தும் வந்திருக்கும் மரபினரில் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் நாட்டிய கலைக்கு ஆற்றியுள்ள பணிகள் பற்றியும், அவர்களுடைய நடனம் பயிற்றுவித்த ஆசிரியர்கள், அவர்களிடம் நடனம் பயின்ற […]

Read more