ஐம்பெருங்காப்பியங்களில் அறக்கோட்பாடு

ஐம்பெருங்காப்பியங்களில் அறக்கோட்பாடு, த. சிவக்குமார், அய்யா நிலையம், பக். 224, விலை ரூ.220. அறவழிப்பட்ட சமுதாயமோ, சமூகமோதான் சிறப்பானதாகக் கருதப்படும். ஆகவேதான், ஐம்பெருங்காப்பியங்களை இயற்றிய ஆசிரியர்கள் அவரவர் சார்ந்த சமயம், மதம் குறித்த அறக்கோட்பாடுகளை தங்கள் காப்பியங்களில் இடம்பெறச் செய்து மக்களை நல்வழிப்படுத்தினர். காப்பியங்களில் உள்ள அறக்கூறுகளை, ஐம்பெருங் காப்பியங்களின் அமைப்பும் நோக்கமும் சமூக அறங்கள், சமய அறங்கள், அறக்கோட்பாடுகளும் தீர்வும் ஆகிய நான்கு இயல்களின் மூலம் இந்நூல் எடுத்துரைக்கிறது. ஐம்பெருங் காப்பியங்களில் அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நால்வகை உறுதிப் பொருள்களும் […]

Read more

தமிழ் இலக்கியங்களில் தேசிய இயக்கத்தின் தாக்கம்

தமிழ் இலக்கியங்களில் தேசிய இயக்கத்தின் தாக்கம், வை.சந்திரசேகர், அய்யா நிலையம்,  பக்.208, விலை ரூ.200. தேசிய இயக்கத்துக்கும் தமிழ் இலக்கியங்களுக்கும் உள்ள உறவை மிக விரிவாக, தெளிவாக எடுத்துரைக்கும் நூல். தமிழ் நாடகங்களில், கவிதைகளில், புதினங்களில், சிறுகதைகளில் தேசிய இயக்கத்தின் தாக்கம் எவ்விதம் செயற்பட்டது என்பதை நிறைய எடுத்துக்காட்டுகளுடன் இந்நூல் விவரிக்கிறது. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை, தேசிய விநாயகம் பிள்ளை உள்ளிட்ட பல கவிஞர்களின் படைப்புகளில் காணப்படும் தேசிய சிந்தனைகளை நூலாசிரியர் எடுத்துக்காட்டுகிறார். தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தேசத்தின் இருகண்களாகக் கொண்டு […]

Read more

மதுரையின் மாண்புகள்

  மதுரையின் மாண்புகள், முனைவர் சி.வடிவேலன், அய்யா நிலையம், விலை 125ரூ. சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரையை பாடாத புலவர்கள் இருப்பார்களா? அதுபோல் மதுரையின் பெருமையை பறைசாற்றும் பாடல்களை கண்டுபிடித்து எளிய விளக்கங்களுடன் தொகுத்து வழங்கியுள்ளார் நூல் ஆசிரியர். சிலப்பதிகாரம், திருமுருகாற்றுப்படை, புறநானூறு, பெருங்குன்றூர் பெருங்கவுசிகனார் போன்ற பல பாடல்களை விளக்கி இருக்கிறார். விண்ணைத் தொடுமளவிற்கு வீடுகள், தென்றல் காற்று புகுவதற்கு சாளரங்கள், பல மொழிகளை பேசும் வணிகர்கள், பலவகை வாத்தியங்களின் ஒலி போன்று அவர் வர்ணிப்பது சங்ககாலத்தில் மதுரை நகரம் எப்படி […]

Read more

நல்லதங்காள் கதைப்பாடல் – பதிப்பும் ஆய்வும்

நல்லதங்காள் கதைப்பாடல் – பதிப்பும் ஆய்வும்,  ஓ.பாலகிருஷ்ணன், அய்யா நிலையம்,  பக். 136, விலை ரூ.130. சாதாரண மக்களின் வாழ்க்கை, பண்பாடு, பழக்க, வழக்கங்கள் நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பிரதிபலிப்பவை நாட்டுப்புற இலக்கியங்கள். மன்னரின் மகளாக, மன்னரின் மனைவியாக இருந்த நல்லதங்காளின் வாழ்க்கைக் கதை என்றாலும், சாதாரண மக்களின் வாழ்க்கையையே நல்லதங்காள் கதைப்பாடல் சொல்கிறது. தொடர்ந்து 12 ஆண்டுகள் மழை பெய்யாததால், பஞ்சம் ஏற்பட்டு, இருக்கும் பொருட்களை எல்லாம் விற்றுத் தின்று, இனி கூலி வேலை செய்தாவது பிழைப்போம் என்றநிலை மன்னர் குடும்பத்துக்கு வர வாய்ப்பில்லை. தனது […]

Read more

செவ்வியல் இலக்கிய மகளிரும் மரபுசார் வாழ்க்கையும்

செவ்வியல் இலக்கிய மகளிரும் மரபுசார் வாழ்க்கையும்,  பதிப்பாசிரியர்  த.மலர்க்கொடி, அய்யா நிலையம்,  பக். 296, விலை ரூ.300. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரித் தமிழ்த்துறை உயராய்வு மையமும் இணைந்து (மூன்று நாள்கள் மார்ச் (4-6, 2015) நடத்திய கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. பண்டைத் தமிழர்களுடைய வாழ்க்கை, மரபு வழிப்பட்ட வாழ்க்கை. சங்ககாலம் தொடங்கி,இக்காலம் வரை அவர்கள் நடைமுறைப்படுத்திய மரபுகள் சில கொள்ளப்பட்டன; சில தள்ளப்பட்டன. இதற்குக் காரணம், தலைமுறை இடைவெளி என்றுகூடச் சொல்லலாம். மேலும், ஆணாதிக்கம் தலைதூக்கி […]

Read more

இந்தியப் பண்பாட்டுத் தூதுவர்கள் தமிழ் நாட்டிய ஆசிரியர்கள்

இந்தியப் பண்பாட்டுத் தூதுவர்கள் தமிழ் நாட்டிய ஆசிரியர்கள், சண்முக செல்வகணபதி, அய்யா நிலையம், பக். 224, விலை 225ரூ. தமிழ்ப் பண்பாடு சமயம் சார்ந்தே இருந்து வந்திருக்கிறது. நடனம் என்பது சமயஞ்சார்ந்த பண்பாட்டுக் கூறு. தமிழ்நாட்டில் நடனம் முதலில் கூத்து என்றும், பின்னர் சதிர் என்றும் அழைக்கப்பட்டு, தற்போது பரதநாட்டியம் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பரதநாட்டியத்தை வழிவழியாகப் பயின்றும் பயிற்றுவித்தும் வந்திருக்கும் மரபினரில் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் நாட்டிய கலைக்கு ஆற்றியுள்ள பணிகள் பற்றியும், அவர்களுடைய நடனம் பயிற்றுவித்த ஆசிரியர்கள், அவர்களிடம் நடனம் பயின்ற […]

Read more

பரம(ன்) இரகசியம்

பரம(ன்) இரகசியம், என். கணேசன், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ் லிமிடெட், சென்னை, விலை 550ரூ. இலக்கியச் சிந்தனை உட்பல பல பரிசுகளைப் பெற்றவை இந்நூலாசிரியரின் படைப்புகள். சிறுகதைகள், நாவல்கள் மட்டுமின்றி ஆழ்மன சக்தி, ஆன்மீகம், சுய முன்னேற்றம், வாழ்வியல் போன்றவை குறித்தும், இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ப நவீன சிந்தனையுடன் இவரது படைப்புகள் உள்ளதால், வாசகர்களிடையே அவற்றிற்கு பெரும் வரவேற்பு உள்ளது. அந்த வகையில் 600 பக்கங்களுக்கு மேல் விரியும் இந்த நாவலும், ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பான, திகிலான, நிகழ்வுகளுடன் தொய்வின்றிக் கதை […]

Read more

உயிர்ப்பு மிக்க காவியம்

உயிர்ப்பு மிக்க காவியம், சீறா வசனகாவியம், கண்ணகுமது மகுதூமுகம்மது புலவர், கல்தச்சன் பதிப்பகம், 21, மேயர் சிட்டி பாபு தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5. சீறாப்புராணத்தின் உரைநடை வடிவம்தான் இந்தச் சீறா வசன காவியம். இதை எழுதியிருப்பவர் காயல்பட்டணத்தைச் சேர்ந்த கண்ணகுமது மகுதூமுகம்மது புலவர். இது 125 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. என்றாலும் அதில் கையாளப்பட்டுள்ள மொழியால் இந்நூல் இன்று உயிர்ப்புடன் இருக்கிறது. இந்தப் புத்தகம் சீறாப்புராணத்தின் பொழிப்புரையோ தெளிவுரையோ அல்ல. கண்ணகுமது மகுதூமுகம்மது புலவர் இதை ஒரு பருந்துப் பார்வையுடன் எழுதியிருக்கிறார். சீறாப்புராணத்தின் […]

Read more

ஜெகாந்தன் சிறுகதைகளில் பெண்

ஜெகாந்தன் சிறுகதைகளில் பெண், ந. சுரேஷ்ராஜன், அய்யா நிலையம், ஆரோக்கியா நகர், ஐந்தாம் தெரு, இ.பி. காலனி, நாஞ்சிக்கோட்டைச் சாலை, தஞ்சாவூர் 613006, பக். 224, விலை 175ரூ. சமூகத்தில் எந்த நிலையில் இருந்தபோதிலும் பெண்கள் சிந்திக்கத் தெரிந்தவர்கள் என்பதைத் தனது படைப்புகள் மூலம், அழுத்தமாகப் பதிவு செய்தவர் ஜெயகாந்தன். அவரது கதைகளில் மேல்தட்டுப் பெண்களை விடவும், நடுத்தர மற்றும் விளிம்பு நிலைப் பெண்களே மிகுதியாக இடம் பெற்றுள்ளனர். அப்படிப்பட்ட பெண் பாத்திரங்களை வரிசைப்படுத்தி அவர்களின் குணாதிசயங்களை விளக்கியிருப்பதோடு, தொடர்புடைய கதைகளில் இருந்து ஓரிரு […]

Read more

ஜெயகாந்தன் சிறுகதையில் பெண்

ஜெயகாந்தன் சிறுகதையில் பெண், ந. சுரேஷ்ராஜன், அய்யா நிலையம், 1603, ஆரோக்கிய நகர் ஐந்தாம் தெரு, இ.பி. காலனி, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் – 613006, விலை 175ரூ. ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகளில் பெண்கள் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் குறித்து ஆய்வு செய்து நூலாக வெளியிட்டுள்ளார் ஆசிரியர். பெண்களும் – குடும்பம், ஆண்-பெண் உறவுநிலை, பெண் தொழிலாளர் நிலை, மரபு வழிப்பட்ட பெண்கள், விளிம்பு நிலை பெண்கள் உள்ளிட்டவை மூலம் சிறுகதைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இந்த நூல் மூலம் ஜெயகாந்தனின் பெரும்பாலான […]

Read more
1 2