சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்

சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள், க. முருகானந்தம், பிரேமா பிரசுரம், சென்னை, விலை 150ரூ. விரதங்கள் என்பது இறைவனை நினைப்பதற்காகவே தோன்றியது என்பதும், ஒரு காரணமாகும். அந்த விரதங்கள் எதற்காக இருக்கிறோம் என்பதுகூட தெரியாதவர்களாகவே பலர் இருக்கின்றனர். இந்த நூலில் சிவபெருமானுக்குரிய எட்டு விரதங்களைப்பற்றி, ஆசிரியர் கூறியிருக்கிறார். விரதங்களின் மகிமை, விரதம் தோன்றிய விதம், இந்த விரத நாட்களில் கோவில்களில் நடைபெறும் விழாக்கள் என்று ஆசிரியரின் பார்வை பரவியிருக்கிறது. நன்றி: தினத்தந்தி.   —- மனோரமா இயர்புக் 2014, மலையாள மனோரமா, சென்னை, விலை […]

Read more

அனுபவச் சுருள்

அனுபவச் சுருள், டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன், கவிதா பப்ளிகேஷன்ஸ், தி.நகர், சென்னை, பக். 192, விலை 125ரூ. ஒரு வங்கி அதிகாரியின் அரசியல் அனுபவங்கள், இலக்கிய ரசனை, நனவோட்ட முறையிலான நிகழ்ச்சித் தொகுப்புகள். பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் எழுச்சி, மொழி பெயர்ப்பு அனுபவம், ஜெயகாந்தன், சி. சுப்ரமணியன், ராஜாஜி போன்றோர்களுடனான நேர்காணல், ஆங்காங்கே தலை தூக்கும் பாரதியின் கவிதை வரிகள் இப்படியே சுவாரஸ்யமாக 192 பக்கங்கள். எந்தத் தலைப்பை எடுத்துப் படித்தாலும் அதில் ஒரு ஆழ்ந்த கருத்தும், யதார்த்தமும் இழையோட அமைந்த அனுபவம். என்னைக் […]

Read more

தமிழ் இலக்கியங்களில் மனமும் மருந்தும்

தமிழ் இலக்கியங்களில் மனமும் மருந்தும், ப. குப்புசாமி, மணி வாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 125ரூ. மனம் பற்றி தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்ட பல்வேறு இலக்கியங்கள் கூறிய கருத்துக்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன. இக்காலத்தில் அதிகமாக பேசப்படும் மன உளைச்சல் பற்றி தமிழ் இலக்கியங்களில் எவ்வாறு பேசப்பட்டுள்ளது என்பது விளக்கமாகவும், விரிவாகவும் கூறப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள மருத்துவ குறிப்புகளையும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். நன்றி: தினத்தந்தி, 8/1/2014.   —-   சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள், சு. […]

Read more