நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள்

நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள், பாகம் ஒன்று, ஓஷோ, தமிழில் சிவதர்ஷிணி, கண்ணதாசன் பதிப்பகம், பக். 356, விலை 210ரூ. உலகில் உள்ள எந்த ஒரு பல்கலைக்கழகமும் கிரேக்க அறிஞர் பிதாகோரஸ் பற்றிக் கவலைப்பட்டதே இல்லை. அதற்கான எளிய காரணம், வழக்கமான வகையைச் சேர்ந்த கல்வியாளராக அவர் இருக்கவில்லை. அவர் நிஜமான தேடல் கொண்டிருந்தார். தன் வாழ்நாள் முழுவதையும் பயணத்திலேயே கழித்தார். ஞானத்தின் ஒளிக்கீற்று எங்காவது ஒரு மனிதரிடம் சற்றே தென்பட்டாலும் அங்கு சென்று அவரிடம் கொஞ்சம் தெரிந்து கொள்ள முடியும் என்று எண்ணினார். […]

Read more

சப்தமில்லா சப்தம்

சப்தமில்லா சப்தம் (ஜென் கதைகள் குறித்த உரைகள்), ஓஷோ, தமிழில் சிவதர்ஷிணி, கண்ணதாசன் பதிப்பகம், பக். 312, விலை 200ரூ. ஐந்து அற்புதமான ஜென் கதைகளின் மூலம் வெளிப்படும் ஓஷோவின் வாக்குகளே சப்தமில்லாமல் நம் இதயத்தை ஊடுருவிச் சென்று பலவித சப்தங்களை நம்முள் எழுப்பிக் கொண்டே இருக்கின்றன. ‘மனித அனுபவத்தில் அம்மாவுக்கும் பிள்ளைக்கும் இடையிலான பாசம் கருணைக்கு நெருக்கமானது. மக்கள் அதை அன்பு என்கிறார்கள். அதை அப்படி அழைக்கலாகாது. அன்பைவிடவும் அது கருணைக்கு நெருக்கமானதாகக் காணப்படுகிறது. கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவர் தாயாகவே […]

Read more