சிதைந்த கூடு

சிதைந்த கூடு, ரவீந்திரநாத் தாகூர், தமிழில் சு.கிருஷ்ணமூர்த்தி, சாகித்திய அகாடமி, விலை 175ரூ. ரவீந்திரநாத் தாகூர் எழுதிய 10 சிறுகதைகளும் பெண்களின் ஆழ் மன ஓட்டத்தைக் கருப்பொருளாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் சரிவரப் புரிந்துகொள்ளப்படாததால், அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களும் கொடுமைகளும் மனதைத் தொடும்வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. தற்காலப் பெண்களின் சிந்தனைக்கு சமமாக 120 ஆண்டுகளுக்கு முன்பே ரவீந்திரநாத் தாகூர் படைத்த புதுமைப் பெண்களின் கதாபாத்திரங்கள் வியக்க வைக்கின்றன. வங்காள மொழியில் எழுதப்பட்ட கதைகளை தமிழில் பிசிறுதட்டாமல் மொழிமாற்றம் செய்து இருப்பதைப் பாராட்டலாம். நன்றி: தினத்தந்தி,18/4/21. இந்தப் […]

Read more

நீலகண்டப் பறவையைத் தேடி

நீலகண்டப் பறவையைத் தேடி, அதீன் பந்த்யோபாத்யாய, தமிழில் சு.கிருஷ்ணமூர்த்தி, என்.பி.டி.வெளியீடு, இதுவரை பழக்கப்பட்ட வாசிப்பிலிருந்து முற்றிலும் வேறு தளத்துக்கு அழைத்துச்செல்லும் நாவல் ‘நீலகண்டப் பறவையைத் தேடி’. எல்லாவற்றிலும் வேகத்தைத் தேடும் மனதைக் கொஞ்சம் நிறுத்தி நிதானமாக வாசிக்கச்சொல்லும் இந்நாவலில் இயற்கை ஒரு பாத்திரம்போல வலம்வருகிறது. ஒவ்வொருமுறை வாசிக்கும்போதும் ரம்மியமான மனநிலைக்கு இட்டுப்போகும் இந்நாவலை உங்கள் கட்டாய வாசிப்புப் பட்டியலில் வைத்துக்கொள்ளுங்கள். நன்றி: தி இந்து, 11/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more