பொன்னகரம்

பொன்னகரம், அரவிந்தன், காலச்சுவடு பதிப்பகம், விலை 230ரூ. மைய நீரோட்டம் எனச் சொல்லப்படும் உலகில் இருப்பவர்கள் நுழையத் தயங்குகிற சாம்பல் உலகத்தில் வெளிச்சத்தைத் தேடுகிற நாவல் இது. கதைக்களம், கதை மாந்தர்கள், அதில் வெளிப்படுத்தக்கூடிய வாழ்வு ஆகியவை நன்கு சித்திரிக்கப்பட்டுள்ளது. ‘பொன்னகரம்’ வெளியில் இருப்பவர்களுக்கு ஒரு சிறிய காலனி. ஆனால் அவர்களைப் பொறுத்தவரை அது ஒரு ஊர். அந்த ஊரின் பொதுத்தன்மை சாம்பல் நிறம். அந்தச் சாம்பல் நிற உலகத்தில் யார் யாரெல்லாம் குற்றாவாளிகள், குற்றம் என்றால் என்ன என்பது குறித்த கேள்விகளையும் எழுப்புகிறது. […]

Read more

பொன்னகரம்

பொன்னகரம், அரவிந்தன், காலச்சுவடு பதிப்பகம், பக். 264, விலை 230ரூ. மண் வாசனை என்று வரும்போது சென்னையைப் பற்றி யாரும் பேசுவதில்லை. இந்த நகரம், பல்வேறு ஊர்கள், மாநிலங்களைச் சேர்ந்த மக்களால் வளர்த்தெடுக்கப்பட்டது. சென்னைக்குள் பல உலகங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை சற்றே அணுகிப்பார்க்கும் முயற்சியில் அந்த உலகின் யதார்த்தம், அதன் நுட்பங்களோடு இந்த நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சினிமாவில் பார்த்திருந்த சென்னைக்கும் நேரில் காணும் காட்சிகளுக்கும் சம்பந்தமே இல்லாத பகவதிபுரம் என்ற இடத்துக்கு திருமணம் செய்து கொண்டு அத்தை மகன் முத்துக்கிருஷ்ணன் சகிதம், […]

Read more