புனைவும் நினைவும் – வெட்ட வெளியில் ஒரு கரிசல் கிராமம்

புனைவும் நினைவும் – வெட்ட வெளியில் ஒரு கரிசல் கிராமம்,  சமயவேல்,  மணல்வீடு இலக்கிய வட்டம், பக்.136; விலை ரூ.100. 1972 இல் பள்ளி இறுதியாண்டை முடித்துவிட்டு கல்லூரிக்குச் செல்வதற்காக தனது சொந்த ஊரான எட்டயபுரம் அருகில் உள்ள வெம்பூரை விட்டுக் கிளம்பிய நூலாசிரியர், அதற்குப் பிறகு அங்கே தொடர்ந்து வாழவில்லை. சொந்த ஊரைப் பிரிந்து 50 ஆண்டுகளானாலும் அதன் நினைவுகளில் அவர் எப்போதும் மூழ்கிக் கிடந்திருப்பது நூலைப் படிக்கும்போது தெரிய வருகிறது. மழை பெய்தால் நிறையும் கண்மாய். கண்மாய் நீரை நம்பி விவசாயம். மழையில்லாவிட்டால் […]

Read more

எழுத்தும் நடையும்

எழுத்தும் நடையும், சி.மணி, தொகுப்பாசிரியர்: கால சுப்ரமணியம், மணல்வீடு இலக்கிய வட்டம், பக்.240, விலைரூ.200. சி.சு.செல்லப்பாவின் எழுத்து என்ற சிறுபத்திரிகை மூலம் அறிமுகமான பல கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் சி.மணி. அவர் எழுதிய சில கவிதைகள், ஒரு சிறுகதை, ஒரு நெடுங்கதை, ஒரு நாடகம், சில கட்டுரைகள், அவரது நேர்காணல் மற்றும் இதுவரை நூலாக்கம் பெறாத சில கவிதைகள் ஆகியவை இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இவரது புகழ்பெற்ற கவிதையான "நரகம்' கவிதை புதுக்கவிதை உலகில் ஒரு மைல்கல் என்று அப்போது புகழப்பட்டது. அது இந்நூலில் இடம் […]

Read more

ஆண்பிரதியும் பெண் பிரதியும்

ஆண்பிரதியும் பெண் பிரதியும்,  சமயவேல், மணல்வீடு இலக்கிய வட்டம், பக்.160, விலை ரூ.150. பல்வேறு சிற்றிதழ்களில், இணைய இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள் பற்றி நூலாசிரியர் எழுதிய கட்டுரைகளும், கரீபியக் கவிஞர் டெரெக் வால்காட் பற்றியும், தமிழ் எழுத்தாளர் மா.அரங்கநாதன் பற்றியும் எழுதப்பட்ட அஞ்சலிக்குறிப்புகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. ந.முத்துசாமி, எஸ்.இராமகிருஷ்ணன், சோ.தர்மன், அய்யப்ப மாதவன், சி.மோகன், லீனா மணிமேகலை, சந்திரா, பெருந்தேவி என தமிழ் இலக்கிய வாசகர்களால் நன்கறியப்பட்ட படைப்பாளிகளின் படைப்புகளைப் பற்றியும், யுகியோ […]

Read more