தமிழக ஜோக்ஸ் எழுத்தாளர்கள் ஒரு பார்வை

தமிழக ஜோக்ஸ் எழுத்தாளர்கள் ஒரு பார்வை, தொகுப்பு திருமயம் பெ. பாண்டியன், அட்டமா, பக். 72, விலை 40ரூ.

கவலைகளை மறந்து சிரிக்கும் மனிதனுக்குத்தான் பல்வேறு வெற்றிகள் சாத்தியம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். அந்த நோயற்ற வாழ்வுக்கு அடிகோலுவது மனமகிழ்ச்சிதான். இன்றைக்கு எல்லா பத்திரிகைகளிலும் ஜோக்ஸ் இடம் பெறுகின்றன.

அதைப் படிப்போர் மன நிம்மதியும் உற்சாகமும் அடைவது உறுதி. அப்படி மக்களை மகிழ்விக்கும் ஜோக்குகளை எழுதி அனுப்புவோர் எப்படி இருப்பார்கள், அவர்களின் பணி என்ன, அவர்கள் செய்து வரும் செயல்கள் எவை எவை, அவர்களின் ஊர், குடும்பம் உள்ளிட்ட செய்திகளுடன் ஜோக் எழுத்தாளர்களைப் பற்றிய தொகுப்பாக இந்நூல் விளங்குகிறது.

மூத்த ஜோக் எழுத்தாளரான சீர்காழி ரேவதி முதல் இன்றைய இளம் எழுத்தாளர்கள் வரையிலான தொகுப்பாக இடம் பெற்றிருப்பது சிறப்பு. ஜோக் எழுத்தாளர்களை கௌரவிக்கும் செயல் இது.

நன்றி: குமுதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *