தேவரடியார்

தேவரடியார், கலையே வாழ்வாக, அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 250ரூ.

1947-ம் ஆண்டு வரை தமிழகக் கோவில்களில் இறைவனுக்கு சேவை செய்வதற்காக நேர்ந்து விடப்பட்ட பெண்கள் பற்றிய ஆவணமாக இந்த நூல் திகழ்கிறது. பன்முகத் தன்மை கொண்ட எழுத்தாளர் அ.வெண்ணிலா, முனைவர் பட்டத்திற்காக தமிழக வரலாற்றை தீவிரமாக ஆய்வு செய்து, தேவதாசிகள் எனப்படும் தேவரடியார்கள் பற்றிய மிக விஸ்தாரமாக எழுதியுள்ள இந்த நூலில் வியப்பான பல தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.

கோவில்களில் ஏராளமாகக் காணப்படும் கல்வெட்டுகள், செப்பேடுகள், பழங்கால இலக்கியங்கள் என்று அனைத்து விதமான தரவுகளில் இருந்து தேவரடியார்கள் பற்றி அவர் சேகரித்துத் தந்து இருக்கும் இந்த நூல், தேவரடியார்கள் வரலாற்றில் முக்கியமான மைல்கல் என்று கூறலாம்.

தேவரடியார்களின், கலைத் திறனை பாராட்டுவதோடு, தேவரடியார்கள் பற்றி சமூகத்தில் நிலவும் தவறான எண்ணங்களை போக்க, தக்க சான்றுகளைக் காட்டி விளக்கி இருப்பதும் பாராட்டத்தக்கது. பின் இணைப்பாக நாட்டிய காரணங்களை விளக்கும் சிற்பம், ஆடல் மகளிர் சிற்பம் ஆகியவற்றின் படங்களும் இந்த நூலில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

நன்றி: தினத்தந்தி 3/7/19,

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029599.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *