ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினப்படி சேதிக் குறிப்பு

ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினப்படி சேதிக் குறிப்பு – 12 தொகுதிகள்; பதிப்பாசிரியர்கள்: மு.இராஜேந்திரன், அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, மொத்த பக்கங்கள்: 5190, விலை ரூ.8,400; தென்னிந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கம் உச்சத்தில் இருந்தபோது, புதுச்சேரியின் ஆளுநர்கள் 4 பேரிடம் துபாஷியாக இருந்தவர் ஆனந்த ரங்கப்பிள்ளை. குறிப்பாக 12 ஆண்டுகள் ஆளுநராக இருந்த துயூப்ளேக்சின் காலத்தில் ஆனந்த ரங்கப்பிள்ளை தலைமை துபாஷியாகப் புகழின் உச்சத்தில் இருந்தவர். 1736 செப்டம்பர் 6 -ஆம் நாள் தன்னுடைய கைப்பட தினப்படி செய்திக் குறிப்புகளை எழுதத் தொடங்கியிருக்கிறார். தொடர்ந்து 25 ஆண்டுகள் […]

Read more

கங்காபுரம்

கங்காபுரம், அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 450ரூ. சோழ சாம்ராஜ்யத்தின் தன்னிகரில்லாத பேரரசனாகவும், தந்தையை மிஞ்சிய தனயனாகவும் விளங்கிய மன்னர் ராஜேந்திரன் மனதில் வெகு காலமாக நிலை கொண்டு இருந்த வேதனையைச் சுற்றி இந்த சரித்திர நாவல் படைக்கப்பட்டு இருக்கிறது. தந்தை ராஜராஜனுக்காக நாட்டின் பல பகுதிகளுக்கும் படை நடத்திச் சென்று, வெற்றியை மட்டுமே ஈட்டித் தந்த ராஜராஜன், இளவரசு பட்டத்திற்காக தனது 50 வயது வரை காத்து இருக்க நேரிட்ட வரலாற்று நிகழ்வையும், அது குறித்து அந்த மன்னரின் உள்ளக்கிடங்கில் குவிந்து கிடந்த […]

Read more

தேவரடியார்

தேவரடியார், கலையே வாழ்வாக, அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 250ரூ. 1947-ம் ஆண்டு வரை தமிழகக் கோவில்களில் இறைவனுக்கு சேவை செய்வதற்காக நேர்ந்து விடப்பட்ட பெண்கள் பற்றிய ஆவணமாக இந்த நூல் திகழ்கிறது. பன்முகத் தன்மை கொண்ட எழுத்தாளர் அ.வெண்ணிலா, முனைவர் பட்டத்திற்காக தமிழக வரலாற்றை தீவிரமாக ஆய்வு செய்து, தேவதாசிகள் எனப்படும் தேவரடியார்கள் பற்றிய மிக விஸ்தாரமாக எழுதியுள்ள இந்த நூலில் வியப்பான பல தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. கோவில்களில் ஏராளமாகக் காணப்படும் கல்வெட்டுகள், செப்பேடுகள், பழங்கால இலக்கியங்கள் என்று அனைத்து விதமான தரவுகளில் […]

Read more

கங்காபுரம்

கங்காபுரம், அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 450ரூ. மதுராந்தகனின் அகவுலகம் ஜோ டி குருஸ்ராஜராஜனுக்கு மகனாய்ப் பிறந்து, அவனது ஒவ்வொரு சிகரச் சாதனைகளுக்கும் காரணமாய் இருந்த மதுராந்தகன் பின்னாளில் தாமதமாகவே ராஜேந்திரன் என மகுடம் சூட்டப்பட்டான். கங்கையும், கடாரமும் கொண்ட இச்சோழ இளவல், தன் முன்னோர்கள் உருவாக்கிய சோழ அரசின் விரிவாக்கத்துக்கும் பாதுகாப்புக்கும் பாடுபட்டதோடு மட்டுமல்லாது, நிர்வாகத் திறத்தால் மக்கள் மனங்களிலும் நீங்கா இடம்பெற்றிருந்தான். சோழர்களின் நீர் மேலாண்மை இன்றும் வியக்கவைக்கிறதே! ராஜேந்திரனின் ஆட்சிக்காலமே தமிழர்களின் பொற்காலம் என்பது யாராலும் என்றும் அழித்துவிட முடியாத […]

Read more

எங்கிருந்து தொடங்குவது?

எங்கிருந்து தொடங்குவது?, அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 100ரூ. கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழும்போது குடும்பம் எனும் கூடு கலையாமல் இருக்கும். கலகலப்பாகவும் இருக்கும். அப்படியின்றி புரிதல் கோளாறினால் பிரிதல் அதிகரித்துவிட்ட இக்காலத்தில், இல்லறம் நல்லறமாக இருப்பதற்கான எளிய வழிகளை இதமுறச் சொல்லும் நூல். மணவாழ்க்கை மணக்க விரும்புவோர் படிக்க வேண்டிய பாடம். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026367.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

எங்கிருந்து தொடங்குவது?

எங்கிருந்து தொடங்குவது?, அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, பக்.144, விலை ரூ.100. குடும்ப வாழ்வில் கணவன் – மனைவிக்கு இடையிலான உறவில் ஏற்படும் பல்வேறு முரண்பாடுகள், அவற்றிற்கான காரணங்கள் இந்நூலில் ஆராயப்பட்டிருக்கின்றன. அன்பும், காதலும் குடும்ப வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்க வேண்டும். ஆனால் எத்தனை கணவன் – மனைவிக்கிடையே அது அடிப்படையாக இருக்கிறது? என்ற கேள்வி எழுகிறது. குடும்பத்தில் ஆணின் ஆதிக்கம் தலைதூக்கி இருப்பது, பெண் வீட்டு வேலைக்காரியாக உழைத்து உழைத்து மாய்ந்து போவது, பெண்ணின் கருத்துகள், உணர்வுகள் மதிக்கப்படாதது, இந்த ஆணாதிக்க குடும்ப அமைப்பைக் காட்டிக் […]

Read more

எரியத் துவங்கும் கடல்

எரியத் துவங்கும் கடல், அ.வெண்ணிலா, அகநி, விலை 275ரூ. பெண்முகம் ‘நானும் கவிதையும் வேறுவேறல்ல, கவிதை பெயரிடப்படாத நான், நான் பெயரழிந்த கவிதை’ என்ற நூலின் முகப்பிலேயே குறிப்பிடும் கவிஞர் வெண்ணிலா இந்த கவிதைத் தொகுப்பில் தன் மொத்த கவியுலகத்தையும் பார்வைக்கு வைக்கிறார். பொதுவாக கவிதை என்பதை மொழி தெரிந்த யார் வேண்மாடுனாலும் எழுதிவிடக்கூடும். ஆனால், அதன் பின்னால் இயங்கும் பித்துப்பிடித்த கவிமனம் தான் கவிஞருக்கும் ‘தொழில் நுட்பவாதிகளுக்கான’ வித்தியாம். வெண்ணிலாவின் கவி உள்ளம் நெகிழ்ச்சியானது. உறவுகளை, உணர்வுகளை, வாழ்வை, சூழலை நெகிழ்வோடு காண்கிறார். […]

Read more

எரியத் துவங்கும் கடல்

எரியத் துவங்கும் கடல், அ. வெண்ணிலா, அகநி வெளியீடு, வந்தவாசி, விலை 275ரூ. எளிமையான வார்த்தைகள் ஆனால் அவற்றில் ஏராளமான எண்ண ஓட்டங்களை பிரதிபலிக்கும் கருத்துகள் என்று இந்த புத்தகம் முழுவதும் உள்ள அனைதுது கவிதைகளும் படித்து சுவைக்கும் வண்ணம் ஆக்கப்பட்டுள்ளன. இந்த கவிதைகள் நான் வாழ்வதின் சாட்சியங்கள் என்று அதன் ஆசிரியர் அ. வெண்ணிலா கூறுவதை மெய்ப்பிக்கும் வகையில் ஒவ்வொரு கவிதையிலும் உள்ளத்து உணர்ச்சிகள் பிரவாகம் எடுத்து ஓடுகின்றன. கவிதைகள் என்றவுடன் சற்று தயங்குபவர்களைக்கூட கட்டிப்போடும் வகையில் சிறிய வரிகளில் சிறந்த கருத்துக்களையும் […]

Read more

புதிய எக்ஸைல்

புதிய எக்ஸைல், சாரு நிவேதிதா, கிழக்கு பதிப்பகம், பக். 867, விலை 1000ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/978-93-5135-191-7.html எழுத்தாளர்களில் கலகக்காரராகவும், கலகக்காரர்களில் எழுத்தாளராகவும் அறியப்பட்ட சாரு நிவேதிதாவின், சமீபத்திய நாவல், புதிய எக்ஸைல். எள்ளலும், துள்ளலும் கொண்ட சாருவின் எழுத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட புனைகதையாக, எக்ஸைல் அமைந்துள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்திலும், மையச் சரடாக பயணப்படும் புனைகதையில் தமிழர்களின் தொன்மையான ஞானமரபு பதிவு செய்யப்பட்டுள்ளது. அகத்தியர், தேரையர், தொல்காப்பியரில் இருந்து துவங்கி, முள்ளி வாய்க்கால் வரை, ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. புல், மரம், […]

Read more

பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்

பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும், அ. வெண்ணிலா, விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 160, விலை 100ரூ. தமிழ் படைப்புலகில் குறிப்பிடத்தக்க கவிஞராக அறியப்பட்ட அ.வெண்ணிலாவின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது.  முதல் 5 கதைகளின் நாயகியாக பிருந்தா வருகிறாள். பூப்பெய்தும் பருவத்தில் உள்ள அவளுடைய குடும்பம் விதிக்கும் தடைகள் ஆண்களால் அவளுக்கு நேரும் அனுபவங்கள் இவற்றில் விவரிக்கப்படுகின்றன. மேல் பார்வைக்கு மென்மையானவர்களாக, அன்பானவர்களாக, இணக்கமானவர்களாகத் தோன்றும் ஆண்கள் ரகசிய வெளியில் அவளுக்கு, பாலியல் தொல்லை தருபவர்களாக மாறிவிடுகிறார்கள். அடுத்தடுத்து இக்கதைகளை வாசிக்கும் […]

Read more
1 2