வீரப்பன் மரணம் யாரால்? எப்படி?

வீரப்பன் மரணம் யாரால்? எப்படி?, நக்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், விலை 300ரூ.

தமிழகம் கர்நாடக அரசுகளுக்கு சிம்ம சொப்பனமாக பல ஆண்டுகள் காட்டில் மறைந்து வாழ்ந்து, அதிகாரிகள் கொலை, முக்கிய பிரமுகர்கள் கடத்தல் உள்ளிட்ட பல கொடூரச் செயல்களைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தனக் கடத்தல் வீரப்பனும் அவனது கூட்டாளிகளும் 2004-ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு, 16 ஆண்டுகளுக்குப் பின்னரும் மக்கள் மனதில் இன்னும் நிழலாடிக் கொண்டு இருப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் இந்த நூல் அமைந்து இருக்கிறது.

வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமார் உள்பட பலரை வெற்றிகரமாக மீட்டு வந்ததோடு, வீரப்பனுடன் பலமுறை பேச்சு வார்த்தை நடத்திய இந்த நூலின் ஆசிரியர், காட்டுக்குள் துணிந்து சென்று வீரப்பன் தொடர்பாகத் திரட்டிய அதிர்ச்சிகரமான உண்மைகளை 2-ம் பாகமான இந்த நூலில் விளக்கமாகத் தந்து இருக்கிறார்.

காட்டில் மறைந்து வாழ்ந்த வீரப்பன் எவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டான் என்பதை அரசுத் தரப்பு ஒரு விதமாகச் சொல்லி இருந்தாலும், அவற்றை மறுத்து இருக்கும் ஆசிரியர், வீரப்பன் கொல்லப்பட்டதில் உள்ள மர்மமுடிச்சுகள் என்று சிலவற்றைத் தெரிவித்து இருப்பது வியப்பான தகவல்களாக உள்ளன. இது தவிர வீரப்பன் குடும்பம் பற்றிய தகவல், அதிகாரிகளை வீரப்பன் கொன்றதன் பின்னணி சம்பவங்கள், வீரப்பனுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தை, சரண் அடைய விரும்பிய வீரப்பன் பிறகு அதில் இருந்து பின்வாங்கியது ஏன் என்பதற்கான விளக்கம் போன்ற வியப்பான வரலாறும், இதுவரை அறியப்படாத வீரப்பன் தொடர்பான ஆச்சரியமான படங்களும் இந்த நூலை ஆர்வத்துடன் படிக்க தூண்டுகோலாக இருக்கின்றன.

நன்றி: தினத்தந்தி,19-2-20.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

 

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.