சரஸ்வதி – ஒரு நதியின் மறைவு
சரஸ்வதி – ஒரு நதியின் மறைவு, மிஷல்தனினோ, கிழக்கு பதிப்பகம், 177/103, அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை – 14, விலை 300 ரூ.
—
கம்பராமாயணம் உரைநடையில், அ. அறிவொளி, வர்த்தமானன் பதிப்பகம், 21, இராமகிருஷ்ண தெரு, தியாகராய நகர், சென்னை – 17, பக்கம் 912, இரு தொகுதிகள் – விலை 390 ரூ.
இந்திய மொழிகள் அனைத்திலும் இடம் பெற்றிருப்பது இராமாயணம். அதிலும் தமிழில் தோன்றிய கம்பராமாயணம், மூல நூலான வால்மீகி இராமாயணம் போன்ற சிறப்புடையது. சில இடங்களில் மூல நூலினையும் விஞ்சும் வகையில் கவிச்சக்கரவர்த்தி கம்பர், தன் இராமாயணத்தைப் படைத்துள்ளார் என அறிஞர் கூறுவர். பாத்திரப் படைப்பிலும் இயற்கை வருணனையிலும் நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தருவதிலும், உவமைகளைக் கையாள்வதிலும் கம்பருக்குத் தமிழ் சொற்கள் அற்புதமாகக் கை கொடுக்கின்றன. கதை சொல்லும் திறனிலும் கம்பர் நிகரற்று விளங்குகிறார். இம்மாபெரும் காப்பியக் கதையை தமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் எளிய உரைநடையில் தந்துள்ளார் அ. அறிவொளி. காப்பியக் கதையை அறிந்துகொண்டால்தான் பிற இயல்புகளை, சிறப்புகளை, மேன்மைகளை உணர்ந்து அனுபவிக்க முடியும் எனும் நோக்கத்தோடு கம்பராமாயணக் காப்பியக் கதையை 112 தலைப்புகளில் விளக்கியுள்ளார் நூலாசிரியர். 50 ஆண்டுகளாகக் கம்பனில் அனுபவம் பெற்றவரின் சீரிய படைப்பு இது.