அன்பே யோகம்

அன்பே யோகம், தா. நீலகண்ட பிள்ளை, செம்மூதாய் பதிப்பகம், 17, தாகூர் தெரு, எம். எம். டி. ஏ. நகர், சிட்லபாக்கம், சென்னை – 64, விலை: ரூ. 80.

திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஆழ்வார்கள், சித்தர்களில் படைப்புகளில் பக்தி, அன்பு நெறி வீற்றிருப்பது 18 கட்டுரைகளிலும் பரந்து விரிந்து கிடக்கிறது. நாலாயிர திவ்விய பிரபந்தம், கம்பராமாயணம், சித்தர் பாடல்கள் உள்ளிட்ட இலக்கியங்களில் பொதிந்த கருத்துக்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் முயற்சியையும் காண முடிகிறது. காதல், வீரம், அன்பு, இசை, சேவை, ஆன்மிகம், நட்பு உள்ளிட்ட அனைத்தும் பக்தி இலக்கியங்களில் கலந்து இருப்பதை இலக்கிய நடையுடன் விளக்கி இருப்பது சிறப்பு அம்சமாகும்.  

 

நந்தவனப் பூக்கள், மு.முத்துசீனிவாசன், ஸ்ரீதேவி பதிப்பகம், 1457, ஸ்ரீவெங்கடேசா நகர், சமத்துவபுரம் சாலை, புதுக்கோட்டை – 622 004, விலை: ரூ.150.

புதுக்கோட்டையைச் சேர்ந்த பிரமுகர்கள், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்துள்ளனர். அவர்களைப் பற்றிய கட்டுரைகள் கொண்ட புத்தகம்.  

 

அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ முக்கிய குறிப்புகள், சசிமதன், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி. நகர், சென்னை – 17, விலை: ரூ. 65.

குடும்ப வாழ்க்கையில் நாம் பல பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியுள்ளது. அத்தகைய பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது, பிரயாணத்தின் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள், பிறரிடம் பழகும்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்… இது போன்ற விஷயங்களுக்கு பயனுள்ள “டிப்ஸ்” களைத் தரும் புத்தகம்.   நன்றி: தினத்தந்தி (3.4.2013).

Leave a Reply

Your email address will not be published.