ஆனந்த தாண்டவம்
ஆனந்த தாண்டவம், குமரன். கே, கே.டிரீம் வேர்ல்டு, பக். 150, விலை 150ரூ.
மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட இளைஞரான ஆசிரியர் கோவை பாரதியார் பல்கலையில், உளவியல் முதகலைப் பட்டம் படித்தவர். இவர் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் மருத்துவமனை ஒன்றில் உளவியல் ஆலோசகராக இருக்கிறார். இவரது இளவயதில் பெற்றோர் சிந்திய கண்ணீர் ஏராளம். ஆனால், இவருக்கு கிடைத்த பெண் ஆசிரியர்கள். கணினி உதவி, அத்தை, பாட்டி என்ற உறவினர் அனைவரும் இவரை நேசத்துடன் வளர்த்த பாங்கு, இவரை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. மாற்றுத் திறனாளியாக இருந்து, சமூக அந்தஸ்தை பெற்ற இந்த இளைஞரது முயற்சி, மற்றவர்களுக்கு நம்பிக்கையூட்டும். அன்பு சாம்ராஜ்யத்தில் வாழ்ந்தால், முன்னுக்கு வரலாம் என்பதற்கு இவர் வாழ்க்கை ஓர் அடையாளம். அதற்கு இவரது இந்த சுயசரிதை நிச்சயம். ஒரு முன்னோடியாக அமையும் என்றால் மிகையாகாது.
—-
ஸ்ரீ காஞ்சீ மஹிமை, காஞ்சிபுரம் கோயில்களின் திருத்தல வரலாறு, யோகா சாவித் பப்ளிகேஷன்ஸ்.
காஞ்சி மாமுனிவருக்கு நெருக்கமானவரும், ஸ்ரீ வித்யா உபாசனையில் சிறந்து காஞ்சிகாமகோடி அம்மனை தொடர்ந்து உபாசித்தவருமான ஸ்ரீ நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள் கருத்தை தாங்கி வெளிவந்த நூல். நகரங்களில் காஞ்சி என்ற புகழ்பெற்ற தெய்வாம்சம் நிறைந்த இந்நகரின் எல்லைகள், காஞ்சி காமாட்சியின் அருள்திறம், அதை தெளிவாக்கும் புராணத் தகவல்கள், வண்ணப்படங்கள் ஆகியவற்றுடன் இந்த நூல் வெளிவந்திருப்பது சிறப்பாகும். ஆன்மிக அன்பர்கள் பெரிதும் விரும்பும் நூல். நன்றி: தினமலர், 19/1/14.