உதயணகுமார காவியம்
உதயணகுமார காவியம், உமா பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.
ஐம்பெரும் காப்பியங்கள் போன்ற ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான உதயணகுமார காவியம் சமண காப்பியத்தை குறிப்பது. இது விருத்தப்பாவில் அமைந்தது. ஆறு காண்டங்களில் 367 பாடல்களைக் கொண்டது. அப்பாடல்களுக்கு விளக்கவுரை கொடுத்திருக்கிறார் முனைவர் பழ. முத்தப்பன். நன்றி: தினத்தந்தி, 5/8/2015.
—-
திருக்குறள் சீர் ஏழுக்கு ஏழு வியனுரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 75ரூ.
இதுவரை திருக்குறளுக்கு அரிய பெரிய சான்றோர்கள் உரை எழுதியுள்ளனர். ஒருவரி உரையும் எழுதியுள்ளனர் சிலர். இன்னும் எளிய உரையில் ஏழு சீர்கள் கொண்ட திருக்குறளுக்கு ஏழு சொற்கள் அமைத்து உரை எழுதி வியக்க வைத்துள்ளார் முனைவர் கோ. ப. செல்லம்மாள். நன்றி: தினத்தந்தி, 5/8/2015.