சகுனி
சகுனி, எஸ். விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 410ரூ.‘
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-292-3.html சகுனி எனும் மகாவீரன், மாபெரும் நம்பிக்கையாளன். தனது தங்கை கான்தாரியின் கணவர் திருதராட்டினன் அஸ்தினாபுரத்தை ஆண்டு வரும் நிலையில் அவருக்குப் பின் தனது சகோதரியின் மகன் துரியோதனன் நாட்டை ஆளவேண்டும் என்று கருதி அதற்காக சகுனி படும் பாடுகள், கஷ்டங்கள், துன்பங்கள், அதனால் ஏற்படும் பெரிய இழப்புகளையும் தாங்கி முடிவில் அவன் மாண்டு போவதை சித்தரிக்கிறார் நூலாசிரியர் எஸ். விஜயராஜ். மகாபாரத கதையில் சகுனி சூதாட்டத்தில் வல்லவன். சூழ்ச்சியில் நிகரற்றவன். சகல கலைகளையும் கற்றறிந்தவன், அனைத்து போர் தந்திரங்களையும் தெரிந்தவன். சொக்கட்டான் காய்களை நகர்த்துவதுபோல் கதை மாந்தர்களை நகர்த்தும் வல்லமை பெற்றவன். இவ்வாறு சகுனியைப் பற்றி எழுதப்பட்டிருந்தாலும், சகுனி போற்றுவதற்குரியவன் என்று சராசரி மனிதனுக்கும் நியாயமாகத் தோன்றுபடி ஆணித்தரமாக எழுதியுள்ளார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி, 27/8/2014.
—-
மனிதனாகும் பொருளே, செல்வி பதிப்பகம், புதுச்சேரி, விலை 100ரூ.
மனிதருக்கு மனிதரை அறிவதற்கு, மனிதராய் வாழ்வதற்காக நூலாசிரியர் கே.வி. புருஷோத்தமன் ஆய்வு செய்து எழுதிய 31 கட்டுரைகள் நூலாக மாறிஉள்ளது. எளிய தமிழ்நடையில் இளைஞர்கள், பெரியவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 27/8/2014.