நடிப்பிசைப்புலவர் கே.ஆர். ராமசாமி நினைவுகள்
நடிப்பிசைப்புலவர் கே.ஆர். ராமசாமி நினைவுகள், வசந்தா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ.
நாடகத்துறையிலும், சினிமா துறையிலும் சாதனை படைத்தவர் கே.ஆர். ராமசாமி. பாகவதர், பி.யு. சின்னப்பா, டி.ஆர். மகாலிங்கம் போல, சொந்தக் குரலில் பாடி நடித்தவர். அறிஞர் அண்ணா வசனம் எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு, சொர்க்கவாசல் முதலான படங்களில் நடித்து புகழ் பெற்றவர். தி.மு. கழகத்தில் உறுப்பினராக இருந்ததால், புராணப் படங்களில் நடிக்க மறுத்தவர். சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதியை கட்சி நலனுக்காக செலவிட்டவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை, அவரோடு நாடகத்தில் நடித்தவரும், பின்னர் அவரை மணந்தவருமான கல்யாணி ராமசாமி அருமையாக எழுதியுள்ளார். படங்களும் நிறைந்துள்ளன. அவசியம் படிக்க வேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி, 12/8/2015.
—-
திருக்கைவளம் மற்றும் திருக்குறுத்தாண்டவம் மூலமும் உரையும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 60ரூ.
வன்னியகுல சத்திரியர்களின் பெருமைகளைக் கூறும் நூல் திருக்கை வளம். திருமங்கை ஆழ்வார் இயற்றிய பக்திப் பாடல்கள் கெண்ட நூல் திருக்குறுந்தாண்டவம். நீண்ட இடைவெளிக்குப் பின் இந்த இரண்டு நூல்களும் நல்ல கட்டமைப்புடன் ஒரே நூலாக வெளிவந்துள்ளது. எளிமையும், இனிமையும் கொண்ட நடையில், உரை எழுதி இருப்பவர் வாசு. இராதாகிருஷ்ணன். நன்றி: தினத்தந்தி, 12/8/2015.