சட்டமேதை அண்ணல் அம்பேத்கர்

சட்டமேதை அண்ணல் அம்பேத்கர், டாக்டர் எச்.வி. ஹண்டே, வசந்தா பதிப்பகம், பக். 176, விலை ரூ. 200. டாக்டர் அம்பேத்கர் பற்றிய எண்ணற்ற நூல்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், அம்பேத்கரின் மிகப் பெரும் சாதனைகளில் ஒன்றாக மதிக்கப்படும் இந்திய அரசியல் சட்ட உருவாக்கத்தைப் பற்றி மிகச் சிறப்பாக இந்நூலில் விவரித்துள்ளார் நூலாசிரியர். “டாக்டர் அம்பேத்கர் அன்ட் த மேக்கிங் ஆஃப் த இந்தியன் கான்ஸ்டிடியூஷன்’ என்ற ஆங்கில நூலின் தமிழாக்கமே இந்நூல். நூலாசிரியர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை ரத்தினச் சுருக்கமாகத் தெரிவித்துவிட்டு, அரசியல் சட்ட உருவாக்கத்தைப் […]

Read more

2050–இல் பெண்கள்

2050–இல் பெண்கள், விஜிமா, வசந்தா பதிப்பகம், விலைரூ.300. கல்வி வாய்ப்பை இழந்து வீட்டில் முடங்கிக் கிடந்த பெண்களின் அவலம் துவங்கி, இன்றைய செழுமையான சூழலை விவரித்து, படிப்பறிவாலும், பட்டறிவாலும், விழிப்புணர்வும் நன்மதிப்பும் எய்தி வருவதை விளக்கிச் சொல்லும் நுால். கடந்த நுாற்றாண்டுகளில் பெரும்பான்மைப் பெண்கள், ஆண்களைச் சார்ந்து இல்லற இயந்திரமாகவும், போகப் பொருளாகவும் உழன்ற நிலைமை மாறி, உயர்ந்த வேலைவாய்ப்புகளால் செல்வாக்கு, எழுச்சி, முன்னேற்றம், தன் மதிப்பு உயர்ந்து வருவதைச் சுட்டிக்காட்டி, கல்வி வளர்ச்சியே பெண்களின் நிலையை புதிய தளத்துக்கு உயர்த்தி இருப்பதை முன்வைக்கிறது. […]

Read more

சமூகம் என்பது தீவுகள் அல்ல

சமூகம் என்பது தீவுகள் அல்ல, ஜி.மணிலால், வசந்தா பதிப்பகம், பக்.160, விலை ரூ.200. “இன்றைய மனித வள மேம்பாட்டிற்கு அடிநாதமாய் இருப்பது ஆதிமனிதனின் அறிவார்ந்த ஆற்றலே. “உன்னை நீ நேசி. பிறகு பிறரை நேசிப்பது எளிதாகிவிடும். “எதையும் நம்புவதற்கு எதையும் நம்பாமல் இருப்பதும் ஒரே வழி. “வாழ்க்கை என்பது சமூகநலன் கருதி மேற்கொள்ளப்படும் தியாகமே.”வாழ்க்கைக்கு ஆதாரம் குடும்பம். வீடு செழித்தால் நாடு செழிக்கும். “வாழ்க்கையில் பிறரை வஞ்சித்து, ஏமாற்றி அதன் மூலம் உயர்ந்த நிலைக்கு வருவது என்பது உலகம் முழுவதும் பரவலாகக் காணப்படும் செயல்முறையாகும். […]

Read more

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறுபிறவியெடுத்த வரலாறு

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறுபிறவியெடுத்த வரலாறு, டாக்டர்.எச்.வி.ஹண்டே, வசந்தா பதிப்பகம், பக். 120, விலை 300ரூ. திரையுலகில் நாடோடி மன்னனாய் வாழ்ந்து, மறைந்தும், மறையாமல் நிரந்தரமாக மக்கள் மனதில் குடியிருக்கும் கோவில், எம்.ஜி.ஆர்., என்றால் மிகையாகாது. புரட்சித் தலைவர் உடல்நலம் குன்றிய கால கட்டத்தில், அவருக்கு என்னென்ன நோய் தாக்குதல்… எத்தகைய சிகிச்சைகளை எந்தெந்த சிறப்பு மருத்துவர்கள் மேற்கொண்டனர் என்ற விபரங்களை, நுாலாசிரியர் ஹண்டே மிகத் தெளிவாக இந்நுாலில் குறிப்பிட்டுள்ளார். மக்கள் திலகத்தின் இதயத்தோடு நெருக்கமாக இருந்து வெற்றிப் பாதையில் பயணித்து, எம்.ஜி.ஆரின் வரலாற்றை எழுதிய […]

Read more

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறுபிறவியெடுத்த வரலாறு

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறுபிறவியெடுத்த வரலாறு, டாக்டர் எச்.வி.ஹண்டே, வசந்தா பதிப்பகம், பக்.120. விலை ரூ.300. மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனங்களில் என்றும் வாழும் வரம் வெகு சிலருக்கே வசப்படும். அதில் எம்ஜிஆருக்கு தனியிடம் உண்டு. எம்ஜிஆர் உடல் நலிவுற்று அதிலிருந்து மீண்டதில் தொடங்கி, சில காலத்துக்குப் பிறகு அவர் மரணம் அடைந்தது வரைக்கும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. அவருடன் நெருங்கிப் பழகியவரும், அவரது அமைச்சரவையில் சுகாதாரத் துறை இலாகாவை வகித்தவருமான மூத்த அரசியல் தலைவர் எச்.வி.ஹண்டேவால் எழுதப்பட்டது இப்புத்தகம் என்பது கூடுதல் சிறப்பு. எனவே, அதில் […]

Read more

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறுபிறவியெடுத்த வரலாறு

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறுபிறவியெடுத்த வரலாறு, டாக்டர் எச்.வி.ஹண்டே, வசந்தா பதிப்பகம், விலை 300ரூ. மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். 1984 செப்டம்பர் 15 -ந் தேதி, விழா ஒன்றில் திடீர் என்று மயங்கி விழுந்த போது தான் அவருக்கு எத்தகைய உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது என்பது தெரிய வந்தது என்ற தகவலை டாக்டர் எச்.வி.ஹண்டே இந்தப் புத்தகத்தில் தெரிவித்து இருக்கிறார். அது முதற்கொண்டு எம்.ஜி.ஆர். மரணம் அடையும் வரை அவருக்கு என்னென்ன கோளாறுகளுக்கு என்னென்ன சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன? […]

Read more

என் பெயர் கதை சொல்லி 1

என் பெயர் கதை சொல்லி 1, ரா.அருள் வளன் அரசு, வசந்தா பதிப்பகம், விலை 120ரூ. உரையாடல் தொகுப்பு காவேரி தொலைக்காட்சியில் ஊடகவியலாளர் ரா.அருள் வளன் அரசு நிகழ்த்திய பதினைந்து ஆளுமைகளுடனான சந்திப்பின் எழுத்து வடிவ தொகுப்பு நூல் இது. கவிஞர் மனுஷ்யபுத்திரன், சல்மா, மனுஷி, நெல்லை ஜெயந்தா, பத்திரிகையாளர் ரவி பிரகாஷ், எழுத்தாளர்கள், ஜோ.டி.குரூஸ், பாஸ்கர் சக்தி, ரமேஷ் வைத்தியா, நா.முத்துக்குமார், பேச்சாளர் சுந்தரவல்லி எனப் பல்வேறுபட்ட ஆளுமைகளின் உரையாடல்கள் சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. கவிஞர் நெல்லை ஜெயந்தாவின் நேர்காணலில் கலைஞர் கருணாநிதியுடன் […]

Read more

ஏறு தழுவுதல்

ஏறு தழுவுதல், கவிஞர் அ.முத்துவேலன், வசந்தா பதிப்பகம், விலை 90ரூ. இந்நுாலில், இறந்தபட்ட காளைக்கும், வீர விளையாட்டு நிகழ்வுகளில் பல்வேறு திறன் கொண்ட காளைகளை அடக்கிய மானுடக் காளையின் மரணம் குறித்தும், ‘தாலிக்கயிறு உமக்கு… தாம்புக்கயிறு எமக்கென்று…’ என்ற கவிதை வரி, தன்னை வளர்த்த பெண்ணிடம், முல்லை நிலக் காளை கூறுவதாக அமைந்துள்ளது. ‘கரந்தை வீரர் நடுகல், மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு, அடலேறே மடலேறு’ உள்ளிட்ட கவிதைகள் ஆற்றுநீராய் பெருக்கெடுத்து, இந்நுாலுக்கு வளம் சேர்க்கின்றன. நன்றி: தினமலர், 20/7/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

நூலகத்தால் உயர்ந்தேன்

நூலகத்தால் உயர்ந்தேன், கோ.மோகனரங்கன், வசந்தா பதிப்பகம், பக்.1096, விலை ரூ.1200. எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி தமிழ் எழுத்துலகில் தனது பெயரை அழுத்தமாகப் பதிவு செய்திருப்பவர் இந்நூலின் ஆசிரியர். அவர் தனது இளமைப் பருவத்திலிருந்தே நூல்களின் மீது அளப்பரிய காதல் கொண்டவராக இருந்திருக்கிறார். பத்தாவது படிக்கும்போது பகல் உணவுக்காக அவருடைய தந்தை தந்த நான்காணாவில் மீதம் பிடித்து, பழைய நூல்களை வாங்கிப் படித்திருக்கிறார். சென்னை பல்லாவரத்தில் இருந்த கார்டன் உட்ராப் தோல் தொழிற்சாலையில் 1959 ஆம் ஆண்டு நாள் கூலி இரண்டு ரூபாய் கிடைத்த வேலையை […]

Read more

நூலகத்தால் உயர்ந்தேன்

நூலகத்தால் உயர்ந்தேன், முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கம், வசந்தா பதிப்பகம், விலை 1200ரூ. தமிழ்நாட்டில், நூலகத்துறை வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கம். கவிஞராகவும், எழுத்தாளராகவும் அறியப்பட்டவர் மோகனரங்கம். அவர் தனது வாழ்க்கை வரலாற்றை “நூலகத்தால் உயர்ந்தேன்” என்ற தலைப்பில் எழுதியுள்ளார். காரணம், தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை நூலகங்களில் கழித்திருக்கிறார். நூலில் ஏராளமான தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் பற்றிய விவரங்களையும் விரிவாக எழுதியுள்ளார். எனவே, இந்த நூல் மூலம் ஒருவருடைய வாழ்க்கையைப் பற்றி மட்டுமல்ல, பலருடைய வாழ்க்கையைப் பற்றி அறிய முடிகிறது. குறிப்பிட்டுச் சொன்னால், […]

Read more
1 2 3