மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்

மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பூம்புகார் பதிப்பகம், விலை 250ரூ.

எழுத்தாளர், பேச்சாளர், இதழ் ஆசிரியர், தொழிலாளர்களின் தோழர் என்பன போன்ற பன்முகம் கொண்டவர், திரு.வி.க. என்று அழைக்கப்பட்ட திரு.வி. கல்யாணசுந்தரனார். காந்தியடிகள் மீதும், அவரது கொள்கைகள் மீதும் அளப்பரிய அன்பும், பிடிப்பும் கொண்டவர். அவர் எழுதிய, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் என்ற நூல் மிகவும் பிரசித்தி பெற்று நூலாகும். அது இப்போது புதிய கட்டமைப்புடன் வெளிவந்துள்ளது. மனிதன் எத்தகைய வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதையும், மனித வாழ்வுக்குப் பேரிலக்கியமாக வாழ்ந்த காந்தியடிகளின் வாழ்க்கை முறையையும் இந்த நூலில் அழகுற எடுத்துரைக்கிறார். மனிதன் மேன்மை அடைய காந்தியடிகள் வாழ்வில் உள்ள நுட்பத்தையும் அவர் அறிவுறுத்திய அறத்தையும் திரு.வி.க. திறம்பட எடுத்து இயம்பியுள்ளார். அனைவரின் இல்லங்களிலும் இருக்க வேண்டிய அரிய பொக்கிஷம் இது. நன்றி: தினத்தந்தி, 30/12/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *