மறக்க முடியாத மாமனிதர் அன்புக்குரிய ஐ.மா.பா.

மறக்க முடியாத மாமனிதர் அன்புக்குரிய ஐ.மா.பா., எஸ். கணேசன், சண்முகம் பதிப்பகம், பக். 152, விலை 100ரூ.

புராதன, வரலாற்றுச் சிறப்பு மிக்க பழமை வாய்ந்த, மதுரை மாநகரம் எண்ணற்ற தியாக சீலர்களை தந்துள்ளது. அவர்களில் ஒருவர், ‘ஏறினால் ரயில், இறங்கினால் ஜெயில்’எனபவம், தோழர் ஐ.மா.பா., எனவும் அழைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் ஐ.மாயாண்டி பாரதி. சுதந்திர போராட்ட வீரர், பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர் என, பன்முகத் திறமை கொண்ட அவரை பற்றி, அனைத்து தகவல்களும் ஒருங்கே இடம் பெற்றிருக்கின்றன இந்த நூலில். அவரது வாழ்க்கை, பேச்சுகள், சுதந்திர போராட்ட வரலாறு போன்ற தகவல்கள் படங்களுடன் வெளியிட்டுள்ளார் நூலாசிரியர். ‘தினமலர்’ நாளிதழில் அவர் குறித்து வெளியான கட்டுரையும் இடம்பெற்றிருப்பது சிறப்பு. இளைய தலைமுறையினர் மட்டுமின்றி அனைவருமே படிக்க வேண்டிய ஒரு நூல் இது. -மேஷ்பா. நன்றி: தினமலர், 27/12/2015.

Leave a Reply

Your email address will not be published.