மீண்டும் ஒரு மழைக்காலத்தில்
மீண்டும் ஒரு மழைக்காலத்தில், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 210ரூ.
கவிஞர் தியாரூ எழுதிய 21 சிறுகதைகளின் தொகுப்பு. இந்த நூலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொறு சிறுகதையையும் சமுதாயக் கண்ணோட்டத்துடனும், ஆழ்ந்த மனித நேயம் வெளிப்படும் விதமாகவும் எழுதியுள்ளார். சிறுகதை வளர்ச்சிக்கு ஆசிரியரின் அழகிய பங்களிப்பு இந்த நூல் என்றால் அது மிகையல்ல. எழுத்து என்பது சமூக நோக்கிற்கான ஓர் உபகரணம்-கருவி என்பதே உண்மை என்று அணிந்துரையில் கவுதம நீலாம்பரன் கூறி இருப்பதை உண்மை ஆக்கியருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 12/8/2015.
—-
அன்புள்ள அம்மா, நவமணி பதிப்பகம், சென்னை, விலை 60ரூ.
ஒரு தாய் எப்படி இருக்க வேண்டும்? தன் அன்னையுடன் ஏற்பட்ட அனுபவங்களைக் கூறி, தாய்க்கு இலக்கணம் வகுக்கிறார் முனைவர் அப்துல் பாரி. நன்றி: தினத்தந்தி, 12/8/2015.