குறுந்தொகை

.
குறுந்தொகை, முனைவர் இர.பிரபாகரன், காவ்யா, விலை 700ரூ.

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை சங்க இலக்கிய நூல்கள் ஆகும். எட்டுத்தொகை நூல்களில் ஒன்று குறுந்தொகை. குறுகிய பாடல்களைக் கொண்டதால் இது குறுந்தொகை எனப்பட்டது. இது மொத்தம் 400 பாடல்களைக் கொண்டது.

குறுந்தொகையில் உள்ள பாடல்கள் கற்பனை வளமும், கவிதை நயமும் நிறைந்த காதல் ஓவியங்கள். குறுந்தகைப் பாடல்கள் காதல் வாழ்க்கையின் பல்வேறு கூறுபாடுகளையும், காதலர்களின் உள்ளத்தையும் சுருக்கமாகவும் அழகாகவும் கூறும் சுவையான பாடல்கள்.

அத்தகைய குறுந்தொகை பாடலுக்கு முனைவர் இர.பிரபாகரன் (மேரிலாந்து, அமெரிக்கா) அழகிய முறையில் உரை எழுதியுள்ளார். ஒவ்வொரு மூலப்பாடல், அதைப் பாடியவர், திணை, கூற்று, கூற்று விளக்கம், கொண்டு கூட்டு, அருங்சொற்பொருள், உரை, சிறப்புக் குறிப்பு என்ற வகையில் விளக்கம் அளித்துள்ளார்.

இது இக்காலத்திற்கு ஏற்ற எளிய உரை. போற்றத்தக்க முயற்சி.

‘நன்றி: தினத்தந்தி, 4/10/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *