நெஞ்சைத் தொடும் நிகழ்வுகள்

நெஞ்சைத் தொடும் நிகழ்வுகள், சு.தங்கவேலு, பூங்கொடி பதிப்பகம், பக். 240, விலை 150ரூ. எல்லாருடைய வாழ்க்கையிலும் நிகழ்வுகள் அனுபவங்களாய் இருந்து கொண்டே இருக்கிறது. நிகழ்வுகளின் மொத்தத் தொகுப்பான வாழ்க்கையில் செய்வதற்கு உரிய செயல்களைச் செய்வது மனிதப் பண்பு, செய்வதற்கு அரிய செயல்களைச் செய்வது இறைப் பண்பு. அப்படி இயங்கும் உலகில் அரிய மனிதர்களின் உயரிய பண்புகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது இந்த நுால். சென்னை மாகாண முதல்வர் ஓமந்துாரார், சாலையோர புளிய மரங்களுக்கு எண் கொடுத்து அதன் மூலம் அரசுக்கு வருவாய் ஏற்படுத்தித்தந்த நிகழ்வு, எம்.கே.தியாகராஜ […]

Read more

பாரதியார் பதில்கள் நூறு

பாரதியார் பதில்கள் நூறு, அவ்வை அருள், ஸ்ரீராம் பாரதி கலை இலக்கிய கழகம், பக். 148, காலங்கள் கடந்து போயினும் பாரதியார் பாடல்களின் வாசம் உலகெங்கும் வானளாவி நித்தியமாய்க் கமழ்ந்து கொண்டிருக்கிறது. இந்திய விடுதலைப் போராட்டக் கொந்தளிப்புகளின்போது சற்றும் அஞ்சாமல் வீரியமாகப் பாடி, பாமரர்களைத் தட்டியெழுப்பி மக்கள் மனதில் அழியாத தடம் பதித்த மகாகவியை, உலக வரலாறு அழுத்தமாகப் பதிவு செய்து கொண்டது. விழித் தீப்பந்தங்களோடு விடுதலைக்குப்பாடிய பாரதியின் வரலாற்றை, இக்கால இந்தியக் குடிமக்கள் அனைவரும் அறிய வேண்டும். பாரதியின் இளமைப்பருவம், தமிழ்ப்பற்று, தேசப்பற்று, […]

Read more

மாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்

மாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள், கு.வை.பாலசுப்பிரமணியன், மணிமேகலை பிரசுரம், விலை 80ரூ. விலங்குகளை பார்ப்பதும், அவற்றை பற்றி கேட்பதும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் பிடிக்கும். வனவிலங்கு பூங்காவுக்கு செல்வதை அனைவரும் விரும்புவர். பல மிருகங்களை நாம் பார்த்துள்ளோம். ஆனால், அவற்றின் குணாதிசயங்கள் உட்பட நமக்கு எதுவும் தெரியாது. அந்த குறையை போக்கும் வகையில், காண்டாமிருகம், யானை, நீர் யானை, ஒட்டகசிவிங்கி, கடமா என்னும் காட்டெருமை, கடுங்கால் ஒட்டகம் ஆகிய விலங்குகள் பற்றி விபரமாக, தெளிவாக, எளிய நடையில் ஆசிரியர்கள் […]

Read more

சேர மன்னர் வரலாறு

சேர மன்னர் வரலாறு, அவ்வை சு.துரைசாமி, ஜீவா பதிப்பகம், விலை 220ரூ. இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு, நாணயம், அகழ்வு ஆய்வுகள் கொண்டு ஒரு நாட்டின் வரலாறு எழுதப்படுகிறது. சேரர் வரலாறு பற்றி கே.ஜி.சேஷைய்யர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். தமிழில், பேராசிரியர் அவ்வை சு.துரைசாமி பிள்ளை, சேர நாடு முழுமையும் சுற்றி தொண்டி, வஞ்சி முதலிய வரலாற்று புகழ்மிக்க இடங்களை நேரில் கண்டு ஆய்வு செய்தார். மலைகள், ஆறுகள் முதலியவற்றின் முந்தைய பெயர்களையும், தற்போது வழக்கில் உள்ள பெயர்களையும் ஆய்ந்து இந்த நுாலில் வெளிப்படுத்தியுள்ளார். சேர நாட்டின் […]

Read more

சுளுந்தீ

சுளுந்தீ, ரா.முத்துநாகு, ஆழி பதிப்பகம், பக். 472, விலை 450ரூ. பண்டுவம் எனும் சித்த மருத்துவம் பார்க்கும், நாவிதர்களின் சமூக வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட நாவல், சுளுந்தீ. இது, ஒரு மரத்தின் பெயர்; இதை, தீக்குச்சியாகவும் எரிபொருளாகவும் பயன்படுத்துவர். ஆசிரியர் இதை வழிகாட்டும் வெளிச்சமாகவும், ஆதிக்க உணர்வுக்கு எதிராக வினை புரியும் எரி நெருப்பாகவும், ஒடுக்கப்பட்டோரின் வாழ்விற்குரிய போர் ஆயுதமாகவும் உணரக் கூடிய வகையில், ஒரு குறியீட்டு நாவலாக அமைத்துள்ளார். இதை, ஒரு தொல்குடி சமூகத்தின் ஆவணமாக கருதலாம். தொன்மை அடையாளத்தின் பண்பாட்டையும், குறிப்பிட்டதொரு […]

Read more

கன்னித் தமிழும் கணினித் தமிகும்

கன்னித் தமிழும் கணினித் தமிகும், இரா.பன்னிரு கை வடிவேலன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பக். 286, விலை 180ரூ. ‘என்று பிறந்தனள் இவள்?’ என அனைவரும் வியக்குமாறு விளங்கும் தமிழின் தொன்மை முதல் இன்றைய வளர்ச்சி வரையிலான ஒரு நீண்ட வரலாற்றுப் பாதையில் பயணிக்கிறது, இந்நுால். தனித்தனியான இருபத்து மூன்று கட்டுரைகளைக் கொண்டிருந்தாலும், மொழியின் வளர்ச்சிப் பாதையில் இவை அமைக்கப்பட்டுள்ளதால் தமிழின் இனிமை மிகுதிப்படுகிறது. தமிழின் சொல்வளத்தை அறியச் செய்யும் நிகண்டுகளில் இந்நுால் தொடங்குகிறது. நிகண்டுகளின் வரலாற்றையும் சிந்தாமணி நிகண்டு, ஐந்திணை மஞ்சிகன் சிறுநிகண்டு […]

Read more

தமிழியல் ஆய்வுகள் மரபும் புதுமையும்

தமிழியல் ஆய்வுகள் மரபும் புதுமையும், இரா.பன்னிருகை வடிவேலன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பக். 357, விலை 230ரூ. சங்க இலக்கியம் தொடங்கி, இன்றைய காலம் வரையிலான தமிழின் இலக்கிய இலக்கணம் குறித்த பல கட்டுரைகளின் தொகுப்பே, இந்நுால். சங்க இலக்கியங்களில் ஆயர்கள், புள்ளினம், வாழ்வியல் எனப் பொதுவான கருத்துகளும், புறநானுாறு, குறுந்தொகை, குறிஞ்சிப்பாட்டு, பதிற்றுப்பத்து குறித்த தனித்த சிந்தனைகளும் கட்டுரைகளாக மலர்ந்துள்ளன. இவ்வாறே, திருக்குறள், சீவகசிந்தாமணி, நளவெண்பா, சித்தர்கள், சிற்றிலக்கியங்கள், நாவல், சிறுகதை, மொழியியல், நாட்டார் வழக்கு, மொழிப்பயன்பாடு என இன்றுவரையிலான பல்வேறு தலைப்புகளில் […]

Read more

செம்மொழிகளின் வரிசையில் தமிழ்

செம்மொழிகளின் வரிசையில் தமிழ், ஜி.ஜான் சாமுவேல், முல்லை நிலையம், பக். 172, விலை 120ரூ. தமிழ்மொழி செம்மொழி மதிப்பை அடைந்து ஐந்தாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அந்த உயரிய அடைதலுக்காக மேற்கொள்ளப்பட்ட அரிய முயற்சிகள் என்ன, அதற்காக சமர்ப்பிக்கப் பட்ட ஆய்வறிக்கைகள் என்னென்ன என்பதைப் பற்றிய வரலாற்று விபரங்களைத் தருகிறது இந்நூல். நம் பண்டைய புலவர்கள் தமிழைச் செவ்வியல் நிலையிலேயே வளர்த்து அதைச் செந்தமிழ் என்று அழைத்து வந்தனர். செவ்வியல் எனும் சொல்லை, ரோமானியர்கள் பெரும்பாலும் உயர்தரமான இலக்கியப் படைப்புகளை சுட்டப் பயன்படுத்தியிருக்க, கிரேக்க இலத்தீன் […]

Read more

தேங்காய்ப் பட்டணமும் மாப்பிள்ளை பாட்டுகளின் வேர்களும்

தேங்காய்ப் பட்டணமும் மாப்பிள்ளை பாட்டுகளின் வேர்களும், தோப்பில் முகம்மது மீரான், இர.பிரபா, எதிர் வெளியீடு, பக். 118, விலை 130ரூ. பிரபஞ்சன் எனும் ஆளுமைக்கு, புதுச்சேரி அரசு மரியாதை செலுத்தியது. தமிழக அரசோ, மத்திய அரசோ ஒரு மலர் வளையத்தைக் கூட எந்த எழுத்தாளருக்கும் வைப்பதில்லை’ (பக்., 11) என்று நியாயமாக ஆதங்கப்படும் நுாலாசிரியர், அன்பின் பெருங்கடலாய் தோப்பில் முகமது மீரானை ஆராதித்து, அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோருடன் உரையாடிய நேர்காணல்களையும், மீரானின் படைப்புகளான தேங்காய்ப் பட்டணம், மாப்பிள்ளைப் பாட்டுகளின் வேர்களையும் இதில் […]

Read more

கபிலரின் அருமையான குறிஞ்சிப் பாடல்களும் எளிமையான விளக்கங்களும்

கபிலரின் அருமையான குறிஞ்சிப் பாடல்களும் எளிமையான விளக்கங்களும், கவிஞர் சி.விநாயகமூர்த்தி, மணிமேகலை பிரசுரம், பக். 268, விலை 200ரூ. கபிலர் மலைநிலமான குறிஞ்சி நிலத்தை பாடுவதில் வல்லவர். சங்க இலக்கியத்தில் மிகுதியான பாடல்கள் பாடியவர்களுள் இவரும் ஒருவர். பாரியின் நண்பராக இருந்து பறம்பு மலையை பலவாறு பாடியவர். கவிஞர் விநாயகமூர்த்தி, பதினாறு தலைப்புகளில் கபிலரின் பாடல்களிலிருந்து பல்வேறு கருத்துகளை இந்நுாலில் அழகுறத் தொகுத்திருக்கிறார். கபிலருக்கும், பாரிக்கும் இருந்த நட்புறவு, கபிலர் பதிற்றுப்பத்தில் பாடிய ஏழாம் பத்து, இன்னா நாற்பது பாடிய கபிலர் முதலியவற்றை முதற்பகுதியில் […]

Read more
1 57 58 59 60 61 240