ஆங்கிலம் அறிவோமே

ஆங்கிலம் அறிவோமே, பாகம் 3, ஜி.எஸ்.எஸ்., தி இந்து வெளியீடு, விலை 140ரூ. படித்துச் சிரி, சிரித்துப் படி புதிதாக ஆங்கிலத்துக்குள் அடியெடுத்து வைப்பவர்களை மட்டுமல்லாமல் ஏற்கெனவே மொழியில் ஆளுமை படைத்தவர்களையும் வெற்றிக்கொடி இணைப்பிதழில் வெளிவரும் ‘ஆங்கிலம் அறிவோமே’ தொடர் ஈர்த்துவருகிறது. எவ்வளவு கடினமான கருத்தையும் சிரிக்கச் சிரிக்கப் புரியவைக்க முடியும் என்பதைத் தன்னுடைய லாகவமான எழுத்துத் திறமையால் தொடர்ந்து நிரூபித்துக்காட்டுபவர் ஜி.எஸ்.எஸ். ஏற்கெனவே இரண்டு புத்தகங்களாக வெளியிடப்பட்ட இந்தத் தொடரின் மூன்றாவது பகுதி அண்மையில் வெளியானது. சிரித்து, ரசித்துப் படித்தபடியே உங்களுடைய ஆங்கில […]

Read more

கல்வி சந்தைக்கான சரக்கல்ல

கல்வி சந்தைக்கான சரக்கல்ல, தொகுப்பு பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு, பாரதி புத்தகாலயம், உயர்கல்விக்கு ஆபத்தா? இந்திய உயர்கல்வியின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கவிருக்கும் நடவடிக்கைகளில் ஒன்று பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைத்துவிட்டு இந்திய உயர் கல்வி ஆணையம் (Higher Education Commission of India – HEI) என்ற புதிய கல்விக் கழகத்தை நிறுவும் மத்திய அரசின் முடிவு. இதற்கான முன்வரைவை ஆழமாகப் பரிசீலித்த கல்வி மீது அக்கறை கொண்ட தனிநபர்களும் அமைப்புகளும் எழுதிய கடிதங்கள், கட்டுரைகளின் தொகுப்பு ‘கல்வி: சந்தைக்கான சரக்கல்ல’ என்ற புத்தகம். முனைவர் […]

Read more

மனிதனாய் ஆன கதை

மனிதனாய் ஆன கதை, முனைவர் சு.தினகரன், அறிவியல் வெளியீடு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், விலை 40ரூ. குரங்கிலிருந்தா? மனிதப் பரிணாமம் குறித்து ஏராளமான புத்தகங்கள் இதுவரை வந்திருந்தாலும் காலத்துக்குத் தேவையான விவாதங்களுடன், ஆய்வு நிரூபணங்களுடன் எளிய மொழி நடையில் முனைவர்.சு.தினகரன் எழுதி இருக்கும் நூல்தான், ‘மனிதனாய் ஆன கதை’. விவசாயிகள் முதல் விஞ்ஞானிகள்வரை பலரை உறுப்பினர்களாகக் கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ‘அறிவியல் வெளியீடு’ இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது. நன்றி: தி இந்து, 8/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

இந்திய அரசும் கல்விக் கொள்கைகளும் 1986 – 2016

இந்திய அரசும் கல்விக் கொள்கைகளும் 1986 – 2016, அ.மார்க்ஸ், அடையாளம் வெளியீடு, விலை 240ரூ. மாறிவரும் கொள்கை! மக்கள் சேவை என்ற நிலையில் இருந்து லாபம் ஈட்டும் பண்டம் என்ற நிலைக்குக் கல்வி தள்ளப்பட்டதற்குப் பின்னால் உள்ள சமூக-பொருளாதார அரசியலை 1986 முதல் 2016 வரை வெளியிடப்பட்ட நான்கு அறிக்கைகளைக்கொண்டு அலசும் புத்தகம், ‘இந்திய அரசும் கல்விக் கொள்கைகளும் 1986-2016’. கடந்த 30 ஆண்டுகளாக இந்திய அரசு வெளியிட்ட கல்விக் கொள்கைகள் குறித்து விமர்சித்து நூல்களை எழுதிவரும் மூத்த கல்வியாளரும் சமூகச் செயற்பாட்டாளருமான […]

Read more

மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?

மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?, தொகுப்பாசிரியர் கி.வீரமணி, திராவிடக் கழக வெளியீடு, விலை 50ரூ. கல்வி நம் உரிமை மக்கள், மொழிகள், பண்பாடுகள் என அத்தனையிலும் பன்மைத்துவமும் ஏற்ற இறக்கமும் கொண்ட தேசத்தில் கல்வியைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டுவருவது என்பது தவறான கொள்கை. இதைச் சுட்டிக்காட்டிக் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரக் கோரும் மாநாடு சென்னையில் 2011-ல் நடத்தப்பட்டது. அதன் புத்தக வடிவமே ‘மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?’ நன்றி: தி இந்து, 8/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

கல்வியும் சுகாதாரமும் கொள்கைகள் பிரச்சினைகள் தீர்வுகள்

கல்வியும் சுகாதாரமும் கொள்கைகள் பிரச்சினைகள் தீர்வுகள், ஜீன் டிருஸ், அமர்த்தியா சென், தமிழில் பேரா.பொன்னுராஜ், பாரதி புத்தகாலயம், விலை 80ரூ. விவாதப் புள்ளிகள் பள்ளிக் கல்வி தொடர்பான சிக்கல்களை வெறும் தகவல்களின் அடிப்படையிலோ சித்தாந்தம் மீதான உணர்வுபூர்வமான சாய்வாலோ அணுகாமல் நுணுக்கமான விவாதப் புள்ளிகளை எழுப்பி, அவற்றின் வழியாக வாசகர்களைச் சிந்தித்துச் செயல்படத் தூண்டுகிறது கல்வியும் சுகாதாரமும் – கொள்கைகள், பிரச்சினைகள், தீர்வுகள். பொருளாதார அறிஞர்கள் அமர்திய சென், ஜீன் டிரீஸ் இணைந்து 2014-ல் எழுதிய ‘An Uncertain Glory- India and its […]

Read more

குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம்

குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம், க.சரவணன், நீலவால் குருவி வெளியீடு, விலை 80ரூ. பெற்றோர், ஆசிரியருக்கு! குழந்தைகளைத் தவறிழைக்க அனுமதிக்க வேண்டும், அவர்கள் தலையில் அறிவைத் திணிக்கக் கூடாது, அவர்கள்மீது அதிகாரம் செலுத்தக் கூடாது, அவர்களுடைய மனநிலைக்கு ஏற்ப ஆசிரியரும் பெற்றோரும் திட்டங்களைத் தீட்ட வேண்டும் என்பது போன்ற சிந்தனைகளைச் செயல்படுத்த நடைமுறை சார்ந்த வழிகாட்டுதலை வழங்குகிறது, ‘குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம்’ புத்தகம். பள்ளித் தலைமையாசிரியராகவும் எழுத்தாளராகவும் உள்ள க.சரவணன் எழுதியிருக்கும் இப்புத்தகம் குழந்தை வளர்ப்பு குறித்துப் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களும் சிறந்த கையேடு. நன்றி: தி […]

Read more

உயிர் இனிது

உயிர் இனிது , கோவை சதாசிவம் , குறிஞ்சி வெளியீடு , விலை 140ரூ.   நமது பெருமைகளான குறிஞ்சி, செங்காந்தள், செங்கால் நாரை, வரையாடு, தேவாங்கு, ஓங்கில், நட்சத்திர ஆமை உள்பட பல்வேறு உயிரினங்கள், தாவரங்கள், இயற்கை அம்சங்கள் பற்றி சுருக்கமாகவும் தெளிவாகவும் அறிமுகப்படுத்தும் 40-க்கும் மேற்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026971.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள்

தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள். சண்முகானந்தம் செயக்குமார்.  எதிர் வெளியீடு. பறவைகளுக்கும் தமிழ் மண்ணுக்குமான உறவு நெடியது, இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பதும்கூட. இந்த உறவை சங்கப் பாடல்கள் தொடங்கி தற்போதுவரை காணலாம். தமிழகத்தில் பறவைகளைப் பாதுகாக்க பல்வேறு சரணாலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.. அவற்றைப் பற்றியும் அங்கு வரும் பறவைகள், அவை சந்திக்கும் பிரச்சினைகள் பற்றியும் விரிவாகவும் படங்களுடனும் உருவாகியிருக்கிறது இந்தப் புத்தகம். நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

நாங்கள் நடந்து அறிந்த காடு

நாங்கள் நடந்து அறிந்த காடு ,lதமிழில் வ.கீதா , தாரா வெளியீடு , மரபு அறிவு பெரும்பாலான நவீனத்துவவாதிகளால் துச்சமாகக் கருதப்படுகிறது. ஆனால், மரபு அறிவு எனும் பொக்கிஷம் எப்படிப்பட்டது. அது எவ்வளவு முக்கியமானது என்பதை ஆனைமலைக் காட்டுப் பகுதிகளில் வாழும் காடர் பழங்குடியினரின் சிலரது வார்த்தைகள் வழியாகக் கதைபோலக் கோத்துத் தந்துள்ளனர் மாதுரி ரமேஷும் மனிஷ் சாண்டியும். இதை எழுத்தாளர் வ.கீதா சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார். நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more
1 2 3 4 5 6 36