பசித்த சிந்தனை

பசித்த சிந்தனை, புவியரசு, அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம், விலை 120ரூ. பூடக வேடம் பூணாத எதார்த்தம் – எளிமை விலகாத வெளிப்பாடு’ என கவிதை புனையும் கவிஞர் புவியரசு எழுதிய 68 கவிதைகளின் தொகுப்பு. சமூக விமர்சனப் பார்வையை எள்ளலோடு வெளிப்படுத்தும் கோபமான கவிதை மொழியால் கட்டமைக்கப்பட்டுள்ள கவிதைகளிவை. யாப்பு மரபைத் திறம்படக் கையாள்பவர் என்பதைச் சொல்லும் கவிதையொன்றும் உள்ளது. ‘எழுதுவதற்கு நீங்கள் ஒன்றும் கொடுப்பதில்லை’ என்று ஒரு கவிதையை தொடங்கியிருக்கும் கவிஞருக்கு, சமூக நிகழ்வுகள் ஏராளமான கவிதைகளைக் கொடுத்திருக்கின்றன. இவற்றைத் திங்கள் புரொமீதிசுகள், […]

Read more

சீன அதிசயங்கள் இந்தியத் தாக்கங்கள்

சீன அதிசயங்கள் இந்தியத் தாக்கங்கள், டி. ஞானையா, அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம், சென்னை. சீனச் சுவடுகள் சீனாவின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் மீது இந்தியா ஏற்படுத்திய தாக்கங்களை விவரிக்கும் நூல் இது. சீனப் பெருமைவாதம், இந்திய தற்பெருமைவாதம், சீன அதிசயங்களில் இந்தியா உள்ளிட்ட ஏழு தலைப்புகளில் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. சீனாவுக்கு பவுத்தத்தை அளித்த இந்தியாவுடன் அதற்கு இருக்கும் தொன்மையான உறவை இந்நூல் பல உதாரணங்கள் வழியாக விளக்குகிறது. சீனா மீது இந்தியர்களுக்கு இருக்கும் தவறான எண்ணங்கள் மீதும் இந்நூல் கவனம் குவிக்கிறது. சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் […]

Read more

காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா உண்மைச் சித்திரம்

காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா உண்மைச் சித்திரம், டி. ஞானையா, அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம், 96, பெரியார் சாலை, பாலவாக்கம், சென்னை 41, பக். 232, விலை 175ரூ. தனது அரசியல் வாழ்வின் தொடக்கத்தில் ஜின்னா தேசியவாதியாகவே இருந்தார் என்றும் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் நடவடிக்கைகளாலேயே அவர் பிரிவினைவாதியாக மாறினார் என்றும், பிரிவினை கோஷத்தைக்கூட அதிக அதிகாரங்கள் பெறுவதற்கான உபாயமாகவே அவர் கருதினார் என்றும் எழுத்தாளர் தின்கர் ஜோஷி, பாஜக தலைவர் ஜஸ்வந்த் சிங் உள்ளிட்ட பலரின் […]

Read more