மூன்றடிகளில் மலர்ந்த புறநானுாறு

மூன்றடிகளில் மலர்ந்த புறநானுாறு, கா.ந.கல்யாணசுந்தரம், கவிஓவியா பதிப்பகம், விலைரூ.150 புறநானுாற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பாடல்களுக்கு எளிய தமிழில் மூன்று அடி கவிதைகளாக வழங்கியுள்ள நுால். தேவைக்கேற்ப ஓவியங்களை அமைத்தும் சிறப்புற விளங்குகிறது. திணை, துறை விளக்கங்கள், புறநானுாற்று செய்யுள்களில் பாடப்பட்ட பெருஞ்சேரல் இரும்பொறை, கிள்ளி வளவன், அதியமான், குமணன், திருமுடிக்காரி, பேகன், வேள்பாரி, அறிவுடைநம்பி, ஓரி, கோப்பெருநள்ளி, ஆய், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, கரிகால் பெருவளத்தான், பள்ளி துஞ்சிய நன்மாறன், முதுகுடுமிப் பெருவழுதி, சேரல் இரும்பொறை போன்ற மன்னர்களின் வரலாறு சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. – முனைவர் […]

Read more

மனசெல்லாம்

மனசெல்லாம், கா.ந.கல்யாணசுந்தரம், வாசகன் பதிப்பகம், பக். 96, விலை 80ரூ. கொக்கும் தூண்டிலும் அருகருகே தடுமாறும் மீன்கள் – என்ற ஹைக்கூ கவிதையில் உள்ள சிந்தனை ஒன்றுபோதும், சமூகத்தின் அதிகார வர்க்கத்தின் நிலையையும் அப்பாவி மக்களின் தடுமாறும் நிலையையும் எடுத்துக்காட்டு. அன்பு, சமூகம், உலகம், ஆன்மீகம், அறிவியல் என்று பலதரப்பட்ட சிந்தனைகளின் வெளிப்பாடு இக்கவிதைத் தொகுப்பு. நன்றி: குமுதம், 22/3/2017.

Read more