சாகசக்காரி பற்றியவை

சாகசக்காரி பற்றியவை, தான்யா, வடலி வெளியீடு, சென்னை, விலை 50ரூ. புலம் பெயர்ந்து கனடாவில் கடந்த 20 ஆண்டுகளாக வாழும் கவிஞர் தான்யாவின் கவிதைநூல். புலம் பெயர்ந்த பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளே கதைகளின் மையக்கரு. பெண்களை குடும்ப அமைப்பும் சமூக அமைப்பும் எப்படி போர்க்குணம் அற்றவர்களாக மாற்றி தன்னலம், குடும்பநலம் என்கிற குறுகிய வட்டத்திற்குள் சுற்றவைக்கிறது என்பதை பதிவு செய்ததோடு அச்சூழலில்லிருந்து வெளிவர போராடிக் கொண்டிருக்கும் சாகசக்காரிகளைப் பற்றிய கவிதைகள் இவை. குடும்பம், குடும்ப உறவுகளுடனான போரே இதன் பாடுபொருளாகியிருக்கிறது. பேராற்றல் மிக்க பெண்களை […]

Read more

கவிதை அலைவரிசை

கவிதை அலைவரிசை, பேராசிரியர் இரா. மோகன், விழிகள் பதிப்பகம், 8/எம் 139, 7ஆம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு, சென்னை 41, பக்கங்கள் 168, விலை 120ரூ. கவிதைகளை ஆய்வு செய்வது என்பது கவிதைகள் எழுதுவதைவிட கடினமானது. முனைவர் தமிழண்ணல் சொன்னதுபோல், இத்தனை கவிஞர்களையும் அவர்களின் அத்தனை கவிதைகளையும் படித்து ஆய்வு செய்ய இவருக்கு மட்டும் நேரம் எங்கே இருந்து கிடக்கிறது. சமகாலக் கவிஞர்கள் பதினெட்டுப் பேரின் கவிதைகளை மக்களுக்கு புதிய கோணத்தில் எடுத்தியம்பும் முயற்சி இது. கவிஞர் குலோத்துங்கன், கவிஞர் […]

Read more