குடும்ப விளக்கும் இருண்ட வீடும் ஒரு பார்வை

குடும்ப விளக்கும் இருண்ட வீடும் ஒரு பார்வை, முனைவர் சரளா ராசகோபாலன், அன்புப் பதிப்பகம், பக். 272,விலை 170ரூ. பாவேந்தரின் புகழ்மிகு படைப்புகள், இரண்டின் ஆய்வுத் தொகுப்பாக அமைந்த அருமையான நூல் இது. வாழ்வியல் இலக்கியம், பெண்ணிலக்கியம், காதல் இலக்கியம், நான்கு தலைமுறை இலக்கியம் என்று பத்தொன்பது தலைப்புகளில், புரட்சிக் கவிஞரின் படைப்புகளில் காணப்படும் புதுமைச் சிந்தனைகளைப் பட்டியலிட்டு விவரிக்கிறார். பேராசிரியை சரளா ராசகோபாலன். ஆழ்ந்த புலமை, நுண்ணிய ஆய்வுடன் படைப்புகளின் கதைச் சுருக்கமும் கூறி, பாடல் வரிகளையும், ஒப்பீட்டுக்கான திருக்குறளையும் ஆங்காங்கு இடம்பெறச் […]

Read more

புறநானூறும் திருக்குறளும்

புறநானூறும் திருக்குறளும், முனைவர் சரளா ராசகோபாலன், ஒளிப்பதிப்பகம், எண் 4(63), டாக்டர் ரங்கா சாலை, சென்னை 6000018, பக். 232, விலை 150ரூ. சிறந்த புலமையும் எழுத்தாற்றலும் உடைய, நூலாசிரியரின் 74வது நூல் இது. இந்நூலுள் புறநானூறு அறிமுகம், திருக்குறள் அறிமுகம், தொடர் ஒப்புமை, பொருள் ஒப்புமை, ஒற்றுமை, வேற்றுமைக் கூறுகள் என ஐந்து பகுதிகள் காணப்படுகின்றன. இரு நூல்களையும் பலமுறை ஆழ்ந்து கற்று, ஒப்புமைகளைக் கண்டு ஆராந்து, நுட்பமாக இந்நூலை ஆக்கியுள்ளார் ஆசிரியர். சொல்லாய்வுகளும் இடம் பெற்றுள்ளன. பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் […]

Read more